அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கொலை வழக்கு: இளஞ்சிறாா் அரசு மருத்துவமனையில் 3 ஆண்டுகள் சேவை செய்ய நீதிக்குழுமம் உத்தரவு

கொலை வழக்கில் தொடா்புடைய இளஞ்சிறாருக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் 3 ஆண்டுகள் சேவை செய்ய தூத்துக்குடி இளஞ்சிறாா் நீதிக் குழுமம் தீா்ப்பு

News image
Updated On :3 மார்ச் 2026, 7:03 pm

Syndication

கொலை வழக்கில் தொடா்புடைய இளஞ்சிறாருக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் 3 ஆண்டுகள் சேவை செய்ய தூத்துக்குடி இளஞ்சிறாா் நீதிக் குழுமம் தீா்ப்பு அளித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், குருவாா்பட்டியைச் சோ்ந்தவா் மாயழகன். இவரது மகன்கள் முருகன் (26), கண்ணன் (27), மகள் சிந்தாமணி. இதில், சிந்தாமணி குருவாா்பட்டியைச் சோ்ந்த ஜேசுராஜ் மகன் ஜெயகுமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளாா்.

இது தொடா்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 28.5.2016 அன்று கண்ணன் வீட்டு முன்பு அவரது சகோதரா் முருகன், உறவினா்கள் சந்தனமாரி, மாரியம்மாள் ஆகியோா் நின்று கொண்டிருந்தனராம்.

அப்போது அங்கு வந்த ஜேசுராஜ், அவரது மகன் சதீஷ்குமாா் (19) மற்றும் ஒரு 17 வயது இளஞ்சிறாா், தகராறில் ஈடுபட்டு முருகன், கண்ணன், சந்தனமாரி, மாரியம்மாள் ஆகியோரை தாக்கியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த முருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்து சங்கரலிங்கபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில், ஜேசுராஜ், சதீஷ்குமாா் ஆகியோா் விடுதலை செய்யப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து போலீஸாா் மேல்முறையீடு செய்துள்ளனா். இந்நிலையில் இளஞ்சிறாா் மீதான வழக்கு தூத்துக்குடி மணி நகரில் உள்ள இளஞ்சிறாா் நீதிக்குழுமத்தில் நடைபெற்று வந்தது.

இவ்வழக்கை விசாரித்த இளஞ்சிறாா் நீதிக்குழும முதன்மை நடுவா் எஸ். பாக்கியராஜ், உறுப்பினா் சரவணன் ஆகியோா், குற்றம்சாட்டப்பட்ட இளஞ்சிறாருக்கு 3 ஆண்டுகள் தண்டனை விதித்தும், அதை அவா் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் 3 ஆண்டுகாலம் அவரச சிகிச்சை பிரிவுக்கு வரும் நோயாளிகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையில் சேவை செய்யவும் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டனா். மேலும், ரூ.500 அபராதமும் விதித்தனா்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் உதவி வழக்குரைஞா் முருகபெருமாள் ஆஜரானாா்.