அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

சுரங்கப்பாதையில் மழை நீரில் சிக்கிய கார்: இருவர் பலி!

கனமழையால் பழைய ஃபரிதாபாத் சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரில் கார் சிக்கியதால் இருவர் பலி.

News image
Updated On :14 செப்டம்பர் 2024, 2:59 pm IST

ஹரியாணாவில் உள்ள பழைய ஃபரிதாபாத் சுரங்கப்பாதையில் மழை நீரில் கார் சிக்கியதால் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

ஹரியாணாவில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடிவரும் நிலையில் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பழைய ஃபரிதாபாத் அருகேயுள்ள சுரங்கப்பாதையில் இன்று அதிகாலை 2 மணியளவில் வேகமாக வந்த எஸ்யூவி கார் ஒன்று போலீஸாரின் தடுப்பை மீறி சுரங்கப்பாதையில் நுழைந்தது. அந்த சுரங்கப்பாதையில் 10 முதல் 12 அடி வரை மழை நீர் தேங்கியிருந்தது.

கார் நீரில் மூழ்கிய நிலையில் காரில் பயணித்த இருவரும் நீரில் மூழ்கினர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் ஜேசிபி முயற்சிகளின் அடிப்படையில் கார் வெளியே கொண்டுவந்தனர். ஒருவரின் சடலம் நேற்றிரவு மீட்கப்பட்ட நிலையில், இன்று காலை மற்றொருவரின் சடலம் மீட்கப்பட்டது.

நீரில் மூழ்கி இறந்தவர்கள் குருகிராம் கிளையில் உள்ள தனியார் வங்கி ஊழியர்கள் என்பது தெரியவந்தது. அதில் ஒருவர் மேலாளராகப் பணியாற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் இடத்தில் அடர்ந்த இருள் சூழ்ந்திருந்ததால் இந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

காரிலிருந்தவர்கள் தப்பிக்க முயன்றும், சரியான நேரத்தில் வெளியே வர இயலாமல் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

கனமழை காரணமாக ஃபரிதாபாத் முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.