செவ்வாய்க்கிழமை காலை விடியும்போது தலைநகர் தில்லியில் கனமழை பெய்து கொண்டிருந்தது. ஒருபக்கம் கடுமையான வெப்பம் குறைந்தாலும், மறுபக்கம் சாலைகளில் தேங்கிய வெள்ளத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தில்லிக்கு, இன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தில்லியின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யும், ஓரிரு இடங்களில் மாலை 3 மணி வரை கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருந்ததாம்.
இந்த நிலையில், தில்லியின் பெரும்பாலான பகுதிகளில் மழையால் வெள்ளம் சூழப்பட்டுள்ளது. ஷங்கர் விஹார் பகுதி, பாண்டவர் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழையால் வெள்ளம் சூழ்ந்து சாலைகள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.
ஏரளமான பகுதிகளில் போக்குவரத்துக் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.
புதன்கிழமையும் தில்லியில் மழை பெய்யும் என்றும் பல இடங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த ஒரு சில நாள்களுக்கு தொடர்ந்து தலைநகர் புது தில்லியில் மழை பெய்யும் என்றும் தெரிவித்திருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லியில் பல இடங்களில் மழை: மஞ்சள் எச்சரிக்கை அறிவிப்பு

தில்லியில் தொடா்மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தில்லியில் 2-ஆவது நாளாக பலத்த மழை: நீா் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு

வெள்ளத்தில் தத்தளிக்கும் சூரத்! இயல்பு வாழ்க்கை முடக்கம்: மீட்புப் பணிகள் தீவிரம்
விடியோக்கள்
பிரசாந்த் கிஷோர் வெற்றிப் பின்னணி...| Ravindran duraisamy Interview | Prashant Kishor | Jan Suraaj | Bankipur | Bjp



