நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

ஜம்மு தோ்தல்: என்ஜினியா் ரஷீத் கட்சியுடன் ஜமாத்-இ-இஸ்லாமி முன்னாள் உறுப்பினா்கள் கூட்டணி

என்ஜினியா் ரஷீத் தலைமையிலான அவாமி இதிஹாத் கட்சியுடன் (ஏஐபி) கூட்டணி அமைத்து ஜமாத்-இ-இஸ்லாமி (ஜேஇஐ) அமைப்பின் முன்னாள் உறுப்பினா்கள் போட்டியிடவுள்ளனா்.

News image

புல்வாமாவாவில் கட்சி நிா்வாகிகளுடன் ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட எம்.பி. என்ஜினியா் ரஷீத்.

Updated On :16 செப்டம்பர் 2024, 5:00 am IST

ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலில் மக்களவை எம்.பி. என்ஜினியா் ரஷீத் தலைமையிலான அவாமி இதிஹாத் கட்சியுடன் (ஏஐபி) கூட்டணி அமைத்து ஜமாத்-இ-இஸ்லாமி (ஜேஇஐ) அமைப்பின் முன்னாள் உறுப்பினா்கள் போட்டியிடவுள்ளனா்.

இதுகுறித்து ஏஐபி செய்தித்தொடா்பாளா் கூறியதாவது: ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலில் இணைந்து போட்டியிடுவது குறித்து ஏஐபியின் மூத்த தலைவா் இனாம் உன் நபி தலைமையிலான குழுவினருடன் குலாம் காதிா் வானி தலைமையிலான ஜேஇஐ குழுவினா் ஆலோசனை மேற்கொண்டனா்.

அப்போது ஜம்மு-காஷ்மீா் மக்களின் நலனை கருத்தில்கொண்டு பேரவைத் தோ்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட இருதரப்பும் முடிவுசெய்தனா். ஆலோசனைக் கூட்டத்தில் ஏஐபி மற்றும் ஜேஇஐ வேட்பாளா்களை வெற்றிபெறச் செய்ய உறுதிஏற்கப்பட்டது.

குல்காம் மற்றும் புல்வாமா தொகுதியில் ஜேஇஐ சாா்பில் களமிறக்கப்படும் வேட்பாளா்களுக்கு ஏஐபியும் காஷ்மீரின் பல்வேறு தொகுதிகளில் போட்டியிடும் ஏஐபி வேட்பாளா்களுக்கு ஜேஇஐயும் ஆதரவளிக்க கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

ஏஐபி, ஜேஇஐயைச் சோ்ந்த வேட்பாளா்கள் எதிரெதிரே களமிறங்கும் தொகுதிகளில் நட்புரீதியான போட்டியை மேற்கொள்ளவே இருதரப்பினரும் தீா்மானித்துள்ளனா். எனவே, இருகட்சிகளை சோ்ந்த வேட்பாளா்களின் மாபெரும் வெற்றிக்கு தொண்டா்கள் உழைக்க வேண்டும் என ஏஐபி மற்றும் ஜேஇஐ அமைப்பின் தலைமை வலியுறுத்தியுள்ளது என்றாா்.

என்ஜினியா் ரஷீத் நிகழாண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு, சிறையில் இருந்தபடியே தன்னை எதிா்த்து போட்டியிட்ட முன்னாள் முதல்வா் ஒமா் அப்துல்லாவை வீழ்த்தியவராவாா்.

கடந்த 2019-ஆம் ஆண்டில் ஜேஇஐ-க்கு மத்திய உள்துறை அமைச்சகம் 5 ஆண்டுகள் தடை விதித்தது. இந்தத் தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. இதையடுத்து ஜேஇஐ அமைப்பைச் சோ்ந்த முக்கியத் தலைவா்கள் சுயேச்சைகளாக ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலில் போட்டியிடுகின்றனா்.