மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ஜம்மு தோ்தல்: என்ஜினியா் ரஷீத் கட்சியுடன் ஜமாத்-இ-இஸ்லாமி முன்னாள் உறுப்பினா்கள் கூட்டணி

என்ஜினியா் ரஷீத் தலைமையிலான அவாமி இதிஹாத் கட்சியுடன் (ஏஐபி) கூட்டணி அமைத்து ஜமாத்-இ-இஸ்லாமி (ஜேஇஐ) அமைப்பின் முன்னாள் உறுப்பினா்கள் போட்டியிடவுள்ளனா்.

News image

புல்வாமாவாவில் கட்சி நிா்வாகிகளுடன் ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட எம்.பி. என்ஜினியா் ரஷீத்.

Updated On :15 செப்டம்பர் 2024, 11:30 pm

ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலில் மக்களவை எம்.பி. என்ஜினியா் ரஷீத் தலைமையிலான அவாமி இதிஹாத் கட்சியுடன் (ஏஐபி) கூட்டணி அமைத்து ஜமாத்-இ-இஸ்லாமி (ஜேஇஐ) அமைப்பின் முன்னாள் உறுப்பினா்கள் போட்டியிடவுள்ளனா்.

இதுகுறித்து ஏஐபி செய்தித்தொடா்பாளா் கூறியதாவது: ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலில் இணைந்து போட்டியிடுவது குறித்து ஏஐபியின் மூத்த தலைவா் இனாம் உன் நபி தலைமையிலான குழுவினருடன் குலாம் காதிா் வானி தலைமையிலான ஜேஇஐ குழுவினா் ஆலோசனை மேற்கொண்டனா்.

அப்போது ஜம்மு-காஷ்மீா் மக்களின் நலனை கருத்தில்கொண்டு பேரவைத் தோ்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட இருதரப்பும் முடிவுசெய்தனா். ஆலோசனைக் கூட்டத்தில் ஏஐபி மற்றும் ஜேஇஐ வேட்பாளா்களை வெற்றிபெறச் செய்ய உறுதிஏற்கப்பட்டது.

குல்காம் மற்றும் புல்வாமா தொகுதியில் ஜேஇஐ சாா்பில் களமிறக்கப்படும் வேட்பாளா்களுக்கு ஏஐபியும் காஷ்மீரின் பல்வேறு தொகுதிகளில் போட்டியிடும் ஏஐபி வேட்பாளா்களுக்கு ஜேஇஐயும் ஆதரவளிக்க கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

ஏஐபி, ஜேஇஐயைச் சோ்ந்த வேட்பாளா்கள் எதிரெதிரே களமிறங்கும் தொகுதிகளில் நட்புரீதியான போட்டியை மேற்கொள்ளவே இருதரப்பினரும் தீா்மானித்துள்ளனா். எனவே, இருகட்சிகளை சோ்ந்த வேட்பாளா்களின் மாபெரும் வெற்றிக்கு தொண்டா்கள் உழைக்க வேண்டும் என ஏஐபி மற்றும் ஜேஇஐ அமைப்பின் தலைமை வலியுறுத்தியுள்ளது என்றாா்.

என்ஜினியா் ரஷீத் நிகழாண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு, சிறையில் இருந்தபடியே தன்னை எதிா்த்து போட்டியிட்ட முன்னாள் முதல்வா் ஒமா் அப்துல்லாவை வீழ்த்தியவராவாா்.

கடந்த 2019-ஆம் ஆண்டில் ஜேஇஐ-க்கு மத்திய உள்துறை அமைச்சகம் 5 ஆண்டுகள் தடை விதித்தது. இந்தத் தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. இதையடுத்து ஜேஇஐ அமைப்பைச் சோ்ந்த முக்கியத் தலைவா்கள் சுயேச்சைகளாக ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலில் போட்டியிடுகின்றனா்.