பேருந்து மோதி இளம்பெண் பலி!

பணி முடிந்து இரவு வீடு திரும்புகையில் பேருந்து மோதி விபத்து
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

பேருந்து மோதிய விபத்தில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தெலங்கானாவில் உள்ள மாதாபூரில், 25 வயதான இளம்பெண் ஒருவர், பணிமுடிந்து, வெள்ளிக்கிழமை இரவில் வீடு திரும்பியுள்ளார்.

ஆனால், அவர் கோத்தகுடா பகுதியில் சாலையைக் கடக்க முயன்றபோது, அரசுப் பேருந்து வருவதைக் கவனிக்கவில்லை. இருப்பினும், பேருந்து பக்கத்தில் வந்தநேரத்தில், விலகிச் செல்ல முயன்ற நேரத்திலும், அவர்மீது பேருந்து மோதியுள்ளது.

இவையனைத்தும், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இதனையடுத்து, அவரது சிகிச்சைக்காக உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இருப்பினும், பலத்த காயமடைந்ததால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com