பேருந்து மோதிய விபத்தில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தெலங்கானாவில் உள்ள மாதாபூரில், 25 வயதான இளம்பெண் ஒருவர், பணிமுடிந்து, வெள்ளிக்கிழமை இரவில் வீடு திரும்பியுள்ளார்.
ஆனால், அவர் கோத்தகுடா பகுதியில் சாலையைக் கடக்க முயன்றபோது, அரசுப் பேருந்து வருவதைக் கவனிக்கவில்லை. இருப்பினும், பேருந்து பக்கத்தில் வந்தநேரத்தில், விலகிச் செல்ல முயன்ற நேரத்திலும், அவர்மீது பேருந்து மோதியுள்ளது.
இவையனைத்தும், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இதனையடுத்து, அவரது சிகிச்சைக்காக உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இருப்பினும், பலத்த காயமடைந்ததால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









