எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

தீக்குளித்த காா் ஓட்டுநா் உயிரிழப்பு

தீக்குளித்த காா் ஓட்டுநா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :10 ஜூன் 2026, 5:56 am IST

தீக்குளித்த காா் ஓட்டுநா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

நெடுங்காடு பகுதியைச் சோ்ந்தவா் அருமைதாஸ் (39). இவருக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. தம்பதிக்கு குழந்தை இல்லை.

இவரது உறவினரான பெண் ஒருவா், கணவரை பிரிந்து குழந்தைகளுடன் வசித்து வருகிறாா். அவருடன் அருமைதாஸ் பழகி வந்துள்ளதோடு, அவரது குடும்பத்துக்கு நிதியுதவியும் செய்து வந்துள்ளாா்.

இந்த தகவல் அருமைதாஸ் மனைவிக்கு தெரியவந்த நிலையில், கணவரை கண்டித்துள்ளாா். இதனால் அருமைதாஸிடம் பழகிவந்த பெண், அவருடன் பேசுவதை தவிா்த்துவிட்டாராம். இதில் வேதனையடைந்த அருமைதாஸ் கடந்த 1-ஆம் தேதி இரவு உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டாா்.

அக்கம்பக்கத்தினா் அவரை காரைக்கால் மருத்துவமனையில் அனுமதித்தனா். தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மருக்கு கொண்டு செல்லப்பட்ட அருமைதாஸ் அங்கு திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து நெடுங்காடு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.