நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

அடுத்த முதல்வர்? கேஜரிவாலை சந்திக்கிறார் மணீஷ் சிசோடியா!

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை சந்தித்து பேசவிருக்கிறார்.

News image

கோப்புப்படம் - Center-Center-Delhi

Updated On :16 செப்டம்பர் 2024, 12:50 pm IST

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை சந்தித்து பேசவிருக்கிறார்.

கலால் கொள்கை முறைகேடு வழக்கில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது. எனினும் முதல்வர் அலுவலகத்துக்குச் செல்லக் கூடாது, எந்த கோப்புகளிலும் கையெழுத்திடக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து, சிறையில் இருந்து வெளியே வந்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தனது முதல்வா் பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்தார்.

இதனால் தில்லியின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழும்பியுள்ளது.

இந்த சூழ்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் இல்லத்தில் அவரை சந்தித்துப் பேசுகிறார்.

அடுத்த முதல்வர் குறித்து இருவரும் ஆலோசிக்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து இன்று மாலை ஆம் ஆத்மி நாடாளுமன்றக் குழு, கேஜரிவாலை சந்தித்துப் பேசுகிறது.

இன்னும் இரு தினங்களில் கேஜரிவால் ராஜிநாமா செய்வார், இந்த வார இறுதிக்குள் அடுத்த முதல்வர் பொறுப்பேற்பார் என்று கட்சியினர் கூறி வருகின்றனர்.

அடுத்த முதல்வர் பதவிக்கு சுனிதா கேஜரிவால், அமைச்சர்கள் அதிஷி, கோபால் ராய் ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன. எனினும் ஓரிரு தினங்களில் தில்லியின் அடுத்த முதல்வர் யார் என்று தெரிய வரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.