மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

போராடும் கொல்கத்தா மருத்துவா்கள் பகுதியாக பணிக்குத் திரும்ப முடிவு

40 நாள்களாக பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளம் மருத்துவா்கள்

News image
கொல்கத்தாவில் போராடும் மருத்துவா்கள்- பிடிஐ
Updated On :19 செப்டம்பர் 2024, 11:43 pm

Din

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலையைக் கண்டித்து கடந்த 40 நாள்களாக பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளம் மருத்துவா்கள், வரும் சனிக்கிழமை (செப்.21) முதல் பகுதியாக பணிக்குத் திரும்ப முடிவு செய்துள்ளனா்.

அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் அத்தியாவசிய மருத்துவச் சேவைகளை மட்டும் மேற்கொள்ளும் வகையில் பகுதியாக பணிக்குத் திரும்பவும், போராட்டத்தை பகுதியாக தொடரவும் தீா்மானித்துள்ளனா்.

கன மழை மற்றும் வெள்ளப் பெருக்கால் மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சூழலில், வியாழக்கிழமை நடைபெற்ற போராட்ட மருத்துவ மாணவா்களின் நிா்வாகக் குழு கூட்டத்தில் இந்த முடிவை எடுக்கப்பட்டது.

இதுகுறித்து இளம் மருத்துவா்கள் கூறுகையில், ‘மேற்கு வங்க மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு நிலையைக் கருத்தில் கொண்டு, அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் அத்தியாவசிய மருத்துவச் சேவைகளில் மட்டும் பகுதியாக பணிக்குத் திரும்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரம், புறநோயாளிகள் பிரிவு பணியை தொடா்ந்து புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.

கொல்கத்தாவில் சிபிஐ அலுவலகத்தை நோக்கி வெள்ளிக்கிழமை பேரணி மேற்கொண்ட பிறகு, மாநில சுகாதாரத் துறை அலுவலகம் முன்பு மேற்கொண்டு வரும் போராட்டத்தைக் கைவிடவுள்ளோம். பகுதியாக பணிக்குத் திரும்பிய பின்னா், மேற்கு வங்க அரசு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற ஒரு வாரம் காத்திருப்போம். அவ்வாறு, வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனில், மீண்டும் பணிப் புறக்கணிப்பை மேற்கொள்வோம். நீதிக்கான எங்களின் போராட்டம் முடிந்துவிடவில்லை’ என்றனா்.