வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

உச்ச நீதிமன்ற யூடியூப் பக்கம் ஹேக் செய்யப்பட்டது!

அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் உச்ச நீதிமன்ற யூடியூப் பக்கம் ஹேக் செய்யப்பட்டது

News image
உச்ச நீதிமன்றம்
Updated On :20 செப்டம்பர் 2024, 6:39 am

DIN

உச்ச நீதிமன்றத்தின் யூடியூப் பக்கத்தை, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஹேக் செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரிப்பிள் என்ற பெயரில் உச்ச நீதிமன்றத்தின் யூ டியூப் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகள் நேரலை செய்யும் பணிகள் இதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஹேக் செய்யப்பட்டிருக்கும் உச்ச நீதிமன்றத்தின் யூடியூப் பக்கத்தில், கிரிப்டோகரன்சி குறித்து விளம்பரப்படுத்தப்படும் தகவல்கள் தற்போது இடம்பெற்றுள்ளன. அதாவது, அமெரிக்காவைச் சேர்ந்த ரிப்பிள் லேப்ஸ் உருவாக்கிய கிரிப்டோகரன்சியான எக்ஸ்ஆர்பியை விளம்பரப்படுத்தும் விடியோக்கள் அதில் இணைக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற யூடியூப் பக்கம்

உச்ச நீதிமன்ற யூடியூப் பக்கம்

இது குறித்து பார் அன்ட் பென்ச் தகவல் வெளியிட்டிருக்கிறது. மக்களின் நலன் கருதி, உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணைகள் அனைத்தும், இந்த யூடியூப் பக்கம் மூலமாகத்தான் நேரடியாகவும் விடியோக்களாகவும் ஒளிபரப்பப்பட்டு வந்தன.

ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட விடியோக்கள்.

ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட விடியோக்கள்.

அண்மையில், கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வரும் வழக்குகள் நேரலை செய்யப்பட்டு வந்தன.

வழக்கு விசாரணைகள் தொடர்பான விடியோக்களும் யூடியூப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டு வந்த நிலையில், அவை அனைத்தும் அழிக்கப்பட்டு, பிரைவேட் ஆக்கப்பட்டுள்ளது. அதனால், அவை அனைத்தும் பிளாங்க் ஆகியிருக்கிறது.

உடனடியாக, யூடியூப் சேனலை மீட்கும் பணியில், தொழில்நுட்ப நிபுணர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அதேவேளையில், யூடியூப் பக்கத்தை முடக்கிய நபர்கள் குறித்தும் விசாரணை தொடங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.