பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

உச்ச நீதிமன்ற யூடியூப் பக்கம் ஹேக் செய்யப்பட்டது!

அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் உச்ச நீதிமன்ற யூடியூப் பக்கம் ஹேக் செய்யப்பட்டது

News image

உச்ச நீதிமன்றம்

Updated On :20 செப்டம்பர் 2024, 12:09 pm IST

உச்ச நீதிமன்றத்தின் யூடியூப் பக்கத்தை, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஹேக் செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரிப்பிள் என்ற பெயரில் உச்ச நீதிமன்றத்தின் யூ டியூப் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகள் நேரலை செய்யும் பணிகள் இதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஹேக் செய்யப்பட்டிருக்கும் உச்ச நீதிமன்றத்தின் யூடியூப் பக்கத்தில், கிரிப்டோகரன்சி குறித்து விளம்பரப்படுத்தப்படும் தகவல்கள் தற்போது இடம்பெற்றுள்ளன. அதாவது, அமெரிக்காவைச் சேர்ந்த ரிப்பிள் லேப்ஸ் உருவாக்கிய கிரிப்டோகரன்சியான எக்ஸ்ஆர்பியை விளம்பரப்படுத்தும் விடியோக்கள் அதில் இணைக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற யூடியூப் பக்கம்

உச்ச நீதிமன்ற யூடியூப் பக்கம்

இது குறித்து பார் அன்ட் பென்ச் தகவல் வெளியிட்டிருக்கிறது. மக்களின் நலன் கருதி, உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணைகள் அனைத்தும், இந்த யூடியூப் பக்கம் மூலமாகத்தான் நேரடியாகவும் விடியோக்களாகவும் ஒளிபரப்பப்பட்டு வந்தன.

ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட விடியோக்கள்.

ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட விடியோக்கள்.

அண்மையில், கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வரும் வழக்குகள் நேரலை செய்யப்பட்டு வந்தன.

வழக்கு விசாரணைகள் தொடர்பான விடியோக்களும் யூடியூப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டு வந்த நிலையில், அவை அனைத்தும் அழிக்கப்பட்டு, பிரைவேட் ஆக்கப்பட்டுள்ளது. அதனால், அவை அனைத்தும் பிளாங்க் ஆகியிருக்கிறது.

உடனடியாக, யூடியூப் சேனலை மீட்கும் பணியில், தொழில்நுட்ப நிபுணர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அதேவேளையில், யூடியூப் பக்கத்தை முடக்கிய நபர்கள் குறித்தும் விசாரணை தொடங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.