உச்ச நீதிமன்றத்தின் யூடியூப் பக்கத்தை, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஹேக் செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரிப்பிள் என்ற பெயரில் உச்ச நீதிமன்றத்தின் யூ டியூப் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகள் நேரலை செய்யும் பணிகள் இதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஹேக் செய்யப்பட்டிருக்கும் உச்ச நீதிமன்றத்தின் யூடியூப் பக்கத்தில், கிரிப்டோகரன்சி குறித்து விளம்பரப்படுத்தப்படும் தகவல்கள் தற்போது இடம்பெற்றுள்ளன. அதாவது, அமெரிக்காவைச் சேர்ந்த ரிப்பிள் லேப்ஸ் உருவாக்கிய கிரிப்டோகரன்சியான எக்ஸ்ஆர்பியை விளம்பரப்படுத்தும் விடியோக்கள் அதில் இணைக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற யூடியூப் பக்கம்
இது குறித்து பார் அன்ட் பென்ச் தகவல் வெளியிட்டிருக்கிறது. மக்களின் நலன் கருதி, உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணைகள் அனைத்தும், இந்த யூடியூப் பக்கம் மூலமாகத்தான் நேரடியாகவும் விடியோக்களாகவும் ஒளிபரப்பப்பட்டு வந்தன.

ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட விடியோக்கள்.
அண்மையில், கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வரும் வழக்குகள் நேரலை செய்யப்பட்டு வந்தன.
வழக்கு விசாரணைகள் தொடர்பான விடியோக்களும் யூடியூப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டு வந்த நிலையில், அவை அனைத்தும் அழிக்கப்பட்டு, பிரைவேட் ஆக்கப்பட்டுள்ளது. அதனால், அவை அனைத்தும் பிளாங்க் ஆகியிருக்கிறது.
உடனடியாக, யூடியூப் சேனலை மீட்கும் பணியில், தொழில்நுட்ப நிபுணர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அதேவேளையில், யூடியூப் பக்கத்தை முடக்கிய நபர்கள் குறித்தும் விசாரணை தொடங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செந்தில் பாலாஜி வழக்கிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி விலகல்!

கங்கையில் பிரியாணி சாப்பிட்டதற்கு 3 மாதம் சிறையா..?- உச்ச நீதிமன்ற நீதிபதி வேதனை

நீதிமன்ற நடவடிக்கைகளை காணொலி பதிவு செய்யவும் பகிரவும் தடை: உச்ச நீதிமன்றம்

தில்லி மெட்ரோ ரயில் நிலையத்தை திறக்காவிட்டால்...! தலைமை நீதிபதி எச்சரிக்கை!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



