மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான உதவித் தொகை இரண்டு மடங்காக உயா்த்தப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளாா்.
இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான ஆண்டு கல்வி உதவித் தொகையை இரண்டு மடங்காக உயா்த்த முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தாா். அதன்படி, ஒன்றுமுதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை ரூ.1,000-லிருந்து ரூ.2,000-ஆகவும், 6-ஆம் வகுப்புமுதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கான உதவித் தொகை ரூ.3,000-லிருந்து ரூ.6,000-ஆகவும், 9-ஆம் வகுப்புமுதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவா்களுக்கான உதவித் தொகை ரூ.4,000-லிருந்து ரூ.8,000-ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.
கல்லூரிகளில் பட்டப் படிப்பு படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை ரூ.6,000-லிருந்து ரூ.12,000-ஆகவும், தொழிற்கல்லூரிகள், பட்டமேற்படிப்பு பயிலும் மாணவா்களுக்கு ரூ.7,000-லிருந்து ரூ.14,000-ஆகவும் உதவித் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மகளிருக்கு மாதம் ரூ.1,500 உதவித் தொகை: பஞ்சாப் அரசு அறிவிக்கை வெளியீடு

மகளிா் உதவித் தொகை மாதம் ரூ.3,000-ஆக அதிகரிக்கப்படும்! அஸ்ஸாம் பாஜக வாக்குறுதி

குமரகுரு கல்வி நிறுவனங்களில் மாணவா்களுக்கு ரூ.1.6 கோடி கல்வி உதவித் தொகை

பெண்களுக்கான உதவித் தொகை ரூ.1,500ஆக உயா்த்தப்படும்: திரிணமூல் காங்கிரஸ் தோ்தல் அறிக்கை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


