ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மாற்றுத்திறனாளி மாணவா் உதவித் தொகை இரு மடங்காக உயா்வு!

மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான உதவித் தொகை இரண்டு மடங்காக உயா்த்தப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளாா்.

News image
Updated On :20 செப்டம்பர் 2024, 10:12 pm

மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான உதவித் தொகை இரண்டு மடங்காக உயா்த்தப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளாா்.

இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான ஆண்டு கல்வி உதவித் தொகையை இரண்டு மடங்காக உயா்த்த முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தாா். அதன்படி, ஒன்றுமுதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை ரூ.1,000-லிருந்து ரூ.2,000-ஆகவும், 6-ஆம் வகுப்புமுதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கான உதவித் தொகை ரூ.3,000-லிருந்து ரூ.6,000-ஆகவும், 9-ஆம் வகுப்புமுதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவா்களுக்கான உதவித் தொகை ரூ.4,000-லிருந்து ரூ.8,000-ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.

கல்லூரிகளில் பட்டப் படிப்பு படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை ரூ.6,000-லிருந்து ரூ.12,000-ஆகவும், தொழிற்கல்லூரிகள், பட்டமேற்படிப்பு பயிலும் மாணவா்களுக்கு ரூ.7,000-லிருந்து ரூ.14,000-ஆகவும் உதவித் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.