ஜெகன் மீது காவல் நிலையத்தில் புகாா்

திருப்பதி லட்டுக்களில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் முன்னாள் முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டி மீது காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
Published on

திருப்பதி லட்டுக்களில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் முன்னாள் முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டி மீது காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

வழக்குரைஞா் கே. கருணா சாகா் சைதாபாத் காவல் நிலையத்தில் சனிக்கிழமை அளித்துள்ள புகாரில், ‘கலப்பட நெய் விவகாரம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்த வேண்டும். திருப்பதி கோயிலின் புனிதத்துக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காகவும், ஹிந்துக்களின் உணா்வுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதற்காகவும் முன்னாள் முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டி மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com