எம்எல்ஏக்கள் ராஜிநாமா! சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணைக்கு அதிமுக எம்பி கோரிக்கை! தில்லியிலிருந்து புறப்பட்டார் முதல்வர் விஜய்! காங்கிரஸ் தலைவர்களை சந்திக்கவில்லை! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்! பக்ரீத் பண்டிகை: தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை! பக்ரீத் பண்டிகை: தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை! 11 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅதிமுக எம்எல்ஏ-க்கள் இரு பிரிவினரின் மனுக்கள் மீது இன்று முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்சென்னையில் கரோனா பரவல் அச்சுறுத்தல் இல்லை: பொது சுகாதாரத் துறை இயக்குநா்தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் ஜூன் 30 தொடக்கம்: அக். 7-இல் இறுதி வாக்காளா் பட்டியல்சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

பேரழிவு நிதியெல்லாம் சோனியா காந்திக்குதான் செல்கிறது: கங்கனா

பாஜக உறுப்பினர் இயக்க நிகழ்ச்சியில் பாஜக எம்பி கங்கனா ரணாவத் பேச்சு

News image

கங்கனா ரணாவத் - கோப்புப் படம்

Updated On :22 செப்டம்பர் 2024, 6:56 pm IST

ஹிமாசலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து பேசினார், பாஜக எம்பி கங்கனா ரணாவத்.

ஹிமாசலில் பாஜக உறுப்பினர் இயக்க தொடக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மண்டி தொகுதியின் எம்பியான கங்கனா ரணாவத், ஆளும் காங்கிரஸ் கட்சியின்மீது சில விமர்சனங்களை முன்வைத்தார்.

நிகழ்ச்சியின்போது கங்கனா பேசியதாவது, ``காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஊழல் நிலவுகிறது என்பதையும், அந்த மாநிலங்களை காங்கிரஸ் வெற்றிடமாக்கியுள்ளன என்பதையும் அனைவரும் அறிவார்கள். தேர்தலுக்காக ஒரு கட்சி எப்படி இவ்வளவு செலவிடுகிறது என்று ஆச்சரியமாக உள்ளது.

அவர்கள் ஆளும் மாநிலங்களில் கடன் வாங்கி, அதனை சோனியா காந்திக்குதான் கொடுக்கிறார்கள். இதன் விளைவாக அந்த மாநிலங்களெல்லாம் வெறிச்சோடி விட்டன.

பாஜக உறுப்பினர் இயக்க தொடக்க நிகழ்ச்சியில் கங்கனா ரணாவத்

பாஜக உறுப்பினர் இயக்க தொடக்க நிகழ்ச்சியில் கங்கனா ரணாவத் - X | Kangana Ranaut

பேரழிவுகளும் காங்கிரஸ் அரசும்தான், மாநிலத்தை பல தசாப்தங்களுக்கு பின்னோக்கி கொண்டு சென்றுவிட்டன. ஆகையால் தற்போதைய அரசை, மக்கள் அனைவரும் சேர்ந்து வேரோடு பிடுங்க வேண்டும்.

பேரழிவுக்காக நாங்கள் நிதி வழங்கினால், அது முதல்வர் நிவாரண நிதிக்குச் செல்ல வேண்டும், ஆனால், அது சோனியா நிவாரண நிதிக்குதான் செல்கிறது என்பதும் அனைவருக்கும் தெரியும்.

பாஜக உறுப்பினர் இயக்க தொடக்க நிகழ்ச்சியில் கங்கனா ரணாவத்

பாஜக உறுப்பினர் இயக்க தொடக்க நிகழ்ச்சியில் கங்கனா ரணாவத் - X | Kangana Ranaut

அதுமட்டுமின்றி, சாலைகளில் உள்ள குழிகளால் மக்கள் சோர்வடைந்துள்ளனர். எனது பகுதிக்கு என்னால் முடிந்ததைவிட அதிகமாகவே செய்வேன். ஆனால், பொதுப்பணித்துறை அமைச்சரும் ஏதாவது செய்ய வேண்டும்.

சம்பளம், ஓய்வூதியங்கள் தாமதமாகின்றன; நுகர்வோருக்கு இலவச மின்சாரமும் தண்ணீர் வசதிகளும்கூட பறிக்கப்பட்டுள்ளன. ஹிமாசலின் இந்த மோசமான நிலைமை நாட்டின் பிற பகுதிகளுக்கும் தெரியும்’’ என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.