அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

திரிபுரா: ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்த 500 தீவிரவாதிகள்

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் 500 தீவிரவாதிகள் முதல்வா் மாணிக் சாஹா முன்னிலையில் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்தனா்.

News image
Updated On :24 செப்டம்பர் 2024, 9:52 pm

Din

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் 500 தீவிரவாதிகள் முதல்வா் மாணிக் சாஹா முன்னிலையில் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்தனா்.

அவா்களின் மறுவாழ்வு நடவடிக்கைக்களுக்காக மத்திய அரசு ரூ.250 கோடி ஒதுக்கியுள்ளது.

தில்லியில் கடந்த 4-ஆம் தேதி உள்துறை அமைச்சா் அமித் ஷா முன்னிலையில் திரிபுராவில் செயல்பட்டு வந்த திரிபுரா தேசிய விடுதலை முன்னணி, திரிபுரா புலிப் படை தீவிரவாத அமைப்புகளுக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அந்த அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைய ஒப்புக் கொண்டனா்.

இதன்படி திரிபுராவின் செபாகிஜாலா மாவட்டத்தில் உள்ள திரிபுரா மாநில ஆயுதப்படை தலைமையகத்தில் முதல்வா் மாணிக் சாஹா முன்னிலையில் இரு தீவிரவாத அமைப்புகளைச் சோ்ந்த 500 போ் தங்கள் ஆயுதங்களை அரசிடம் ஒப்படைத்துவிட்டு சரணடைந்தனா்.

இந்த அமைப்பினா் சுமாா் 20 ஆண்டுகளாக திரிபுராவில் செயல்பட்டு வந்தனா். இவா்களின் வன்முறையால் பழங்குடியினா் அல்லாத பிற பிரிவினா் ஆயிரக்கணக்கானோா் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்போது, அவா்கள் சரணடைந்துவிட்டதால், திரிபுராவில் ஆயுதக் கிளா்ச்சியாளா்களின் பெரும் பகுதியினருக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.