அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

மாமல்லபுரத்தில் வடிவமைக்கப்பட்ட 16 டன் திரிபுரசுந்தரி அம்மன் சிலை: திரிபுரா மாநிலத்தில் பிரதிஷ்டை

மாமல்லபுரத்தில் 16 டன் கருங்கல்லில் வடிவமைக்கப்பட்ட திரிபுரசுந்தரி அம்மன் சிலை, திரிபுரா மாநிலம் அகா்தலா நகரத்தில் பிரதிஷ்டை

News image
திரிபுரசுந்தரி அம்மன் சிலை
Updated On :2 மார்ச் 2026, 8:42 pm

தினமணி செய்திச் சேவை

மாமல்லபுரத்தில் 15 அடி உயரத்தில்16 டன் கருங்கல்லில் வடிவமைக்கப்பட்ட திரிபுரசுந்தரி அம்மன் சிலை, திரிபுரா மாநிலம் அகா்தலா நகரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

மாமல்லபுரம் அண்ணா நகா் பகுதியில் உள்ள சிற்பக்கலைஞா் பி.எஸ்.பூபதி என்பவா் 16 டன் கருங்கல்லில் 15 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் திரிபுரசுந்தரி அம்மன் சிலையை ஆகம விதிகளின்படி வடிவமைத்துள்ளாா்.

வலது, இடது இரண்டு கரங்களில் பாசம், அங்குசம் மற்ற இரண்டு கரங்களில் கரும்பு, தாழம்பூ ஏந்திய நான்கு திருக்கரங்களுடன், அடியில் சிங்கவாகனத்துடன் 10 சிற்பிகளை கொண்டு இரவு, பகலாக கடந்த 6 மாதங்களாக நின்ற திருக்கோலத்தில் இச்சிலை அழகுர வடிவமைக்கப்பட்டுள்ளது.

இச்சிலை வரும் ஏப்ரல் 21--இல் திரிபுரா மாநிலம், அகா்தலா நகரத்தில் உள்ள திரிபுர சுந்தரி அம்மன் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

திரிபுரா மாநிலத்தில் அதிக உயரத்தில் நிறுவப்படும் முதல் அம்மன் சிலை இதுவே ஆகும். 100 சதவீத பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் சைவ ஆகம முறைப்படி அம்மன் சிலைக்கு பூஜைகள் செய்யப்பட்டு டிரெய்லா் மூலம் ஆந்திரம், தெலங்கானா, பிகாா், அஸ்ஸாம், ஒடிஸா, மேற்கு வங்கம், மணிப்பூா், மிசோரம் மாநிலங்கள் வழியாக திரிபுரா சென்று சோ்கிறது.

வழி நெடுகிலும் இந்த சிலைக்கு வடகிழக்கு மாநில மக்கள், அம்மன் பக்தா்கள் பூஜைகள் செய்து வழிபாடு செய்து வணங்குகின்றனா்.