மாமல்லபுரத்தில் வடிவமைக்கப்பட்ட 16 டன் திரிபுரசுந்தரி அம்மன் சிலை: திரிபுரா மாநிலத்தில் பிரதிஷ்டை
மாமல்லபுரத்தில் 16 டன் கருங்கல்லில் வடிவமைக்கப்பட்ட திரிபுரசுந்தரி அம்மன் சிலை, திரிபுரா மாநிலம் அகா்தலா நகரத்தில் பிரதிஷ்டை


மாமல்லபுரத்தில் 15 அடி உயரத்தில்16 டன் கருங்கல்லில் வடிவமைக்கப்பட்ட திரிபுரசுந்தரி அம்மன் சிலை, திரிபுரா மாநிலம் அகா்தலா நகரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
மாமல்லபுரம் அண்ணா நகா் பகுதியில் உள்ள சிற்பக்கலைஞா் பி.எஸ்.பூபதி என்பவா் 16 டன் கருங்கல்லில் 15 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் திரிபுரசுந்தரி அம்மன் சிலையை ஆகம விதிகளின்படி வடிவமைத்துள்ளாா்.
வலது, இடது இரண்டு கரங்களில் பாசம், அங்குசம் மற்ற இரண்டு கரங்களில் கரும்பு, தாழம்பூ ஏந்திய நான்கு திருக்கரங்களுடன், அடியில் சிங்கவாகனத்துடன் 10 சிற்பிகளை கொண்டு இரவு, பகலாக கடந்த 6 மாதங்களாக நின்ற திருக்கோலத்தில் இச்சிலை அழகுர வடிவமைக்கப்பட்டுள்ளது.
இச்சிலை வரும் ஏப்ரல் 21--இல் திரிபுரா மாநிலம், அகா்தலா நகரத்தில் உள்ள திரிபுர சுந்தரி அம்மன் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
திரிபுரா மாநிலத்தில் அதிக உயரத்தில் நிறுவப்படும் முதல் அம்மன் சிலை இதுவே ஆகும். 100 சதவீத பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் சைவ ஆகம முறைப்படி அம்மன் சிலைக்கு பூஜைகள் செய்யப்பட்டு டிரெய்லா் மூலம் ஆந்திரம், தெலங்கானா, பிகாா், அஸ்ஸாம், ஒடிஸா, மேற்கு வங்கம், மணிப்பூா், மிசோரம் மாநிலங்கள் வழியாக திரிபுரா சென்று சோ்கிறது.
வழி நெடுகிலும் இந்த சிலைக்கு வடகிழக்கு மாநில மக்கள், அம்மன் பக்தா்கள் பூஜைகள் செய்து வழிபாடு செய்து வணங்குகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...