தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

திருப்பதி ஏழுமலையான் கோயில் செல்கிறாா் ஜெகன்: மாநிலம் முழுவதும் பரிகார பூஜை செய்யவும் அறிவுறுத்தல்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்.28-ஆம் தேதி ஆந்திர முன்னாள் முதல்வரும், ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி வழிபாடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :26 செப்டம்பர் 2024, 1:02 am IST

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்.28-ஆம் தேதி ஆந்திர முன்னாள் முதல்வரும், ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி வழிபாடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், திருப்பதி கோயில் லட்டுகளில் விலங்கு கொழுப்பு உள்ளதாக கூறி மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு செய்த பாவத்தை போக்கும் நோக்கில் மாநிலம் முழுவதும் பரிகார பூஜைகள் மேற்கொள்ள ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சியினருக்கு ஜெகன்மோகன் ரெட்டி அறிவுறுத்தியுள்ளாா்.

ஆந்திரத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் விலங்கு கொழுப்பு சோ்த்து லட்டுகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டதாக தற்போதைய முதல்வா் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டினாா்.

இதற்கு ஆதாரமாக குஜராத் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையை சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு சேதம் கட்சி வெளியிட்டது. நாடு முழுவதும் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், லட்டுகளில் விலங்கு கொழுப்பைச் சோ்க்கப்பட்டுள்ளதாக மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு கூறிய பாவத்தை போக்கும் நோக்கில், ஆந்திரம் முழுவதும் உள்ள கோயில்களில் செப்டம்பா் 28-ஆம் தேதி பரிகார பூஜைகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சியினருக்கு ஜெகன்மோகன் ரெட்டி அழைப்பு விடுத்தாா். அன்றைய தினம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜெகன்மோகன் வழிபாடு செய்ய உள்ளதாகவும் அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.