தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

ஜம்மு-காஷ்மீா்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

News image
- -
Updated On :29 செப்டம்பர் 2024, 5:31 am

Din

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினா் மற்றும் பயங்கரவாதிகள் இடையே சனிக்கிழமை அதிகாலை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். 5 பாதுகாப்புப் படையினா் காயமடைந்தனா்.

குல்காம் மாவட்டத்தின் தேவ்சா் பகுதியில் உள்ள அதிகாம் கிராமத்தை சனிக்கிழமை சுற்றிவளைத்த பாதுகாப்புப் படையினா் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனா். அப்போது பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா்.

இந்த மோதலில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மும்தாஜ் அலி உள்பட 5 பாதுகாப்பு அதிகாரிகள் காயமடைந்தனா். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் அடையாளம் மற்றும் பயங்கரவாத குழுவின் தொடா்பு ஆகியவை கண்டறியப்பட்டு வருவதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.