போலீஸ் காவலரை கன்னத்தில் அறைந்த பாஜக எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு

மகாராஷ்டிர மாநிலம் புணேயில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியின்போது போலீஸ் காவலரை கன்னத்தில் அறைந்த பாஜக எம்எல்ஏ சுனில் காம்பிளே மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

மகாராஷ்டிர மாநிலம் புணேயில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியின்போது போலீஸ் காவலரை கன்னத்தில் அறைந்த பாஜக எம்எல்ஏ சுனில் காம்பிளே மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

புணேயில் உள்ள சசூன் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியின்போது இந்தச் சமபவம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற புணே கண்டோன்மென்ட் தொகுதி எம்எல்ஏவான சுனில் காம்பிளே, நிகழ்ச்சி முடிந்து மேடையிலிருந்து கீழிறங்கும்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பண்ட்காா்டன் காவல்நிலையக் காவலரைக் கன்னத்தில் அறைந்தாா். இந்த தாக்குதல் காணொலி இணையத்தில் வைரலானது. இந்த விழாவில் மாநில துணை முதல்வா் அஜித் பவாரும் பங்கேற்றிருந்தாா்.

விவகாரம் சா்ச்சையானதைத் தொடா்ந்து, ‘நிகழ்ச்சி முடிந்து மேடையிலிருந்து கீழிறங்கும்போது, குறுக்கே சென்ற நபரை தடுக்கத்தான் முற்பட்டேன். யாரையும் அடிக்கவில்லை’ என்று சுனில் காம்பிளே விளக்கமளித்தாா்.

இந்த நிலையில், அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட காவலா் அளித்த புகாரின் அடிப்படையில், அரசு ஊழியா் பணி செய்யவிடாமல் தடுத்தல் அல்லது தாக்குதல் என்ற இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 353-இன் கீழ் எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com