பழங்குடியின மக்களின் குழந்தைகள் கல்வி கற்பதை பாஜக விரும்பவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணத்தின் ஒருபகுதியாக அஸ்ஸாமில் நடைப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி மஜூலியில் பேசியபோது இவ்வாறு தெரிவித்தார்.
இதையும் படிக்க | இந்தத் தாக்குதல் அவர்களைத் தடுத்து நிறுத்தியதா? : ஜோ பைடன் கேள்வி
பழங்குடியின மக்களிடம் ராகுல் காந்தி பேசியதாவது, “நாங்கள் உங்களை ஆதிவாசிகள் என்று அழைக்கிறோம். பாஜக உங்களை வனவாசிகள் என்றழைக்கிறது. இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது.
பாஜக உங்களை காடுகளிலேயே வைத்திருக்க விரும்புகிறது. உங்களின் குழந்தைகள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று கல்வி கற்பதை பாஜக விரும்பவில்லை. உங்களின் குழந்தைகள் ஆங்கிலம் கற்பதையோ, தொழில் செய்வதையோ பாஜக விரும்பவில்லை.
உங்களிடம் இருந்து எடுக்கப்பட்டதை மீண்டும் வழங்குவதற்கு நாங்கள் விரும்புகிறோம். உங்களது நிலம், வனம் மற்றும் நீர் ஆகியவை மீண்டும் உங்களிடம் வழங்கப்பட்டாக வேண்டும். அதற்காக நாங்கள் சட்டம் இயற்றுவோம்.
பல மாதங்களாக மணிப்பூரில் உள்நாட்டுப் போர் நடப்பது போன்ற சூழல் நிலவி வருகிறது, இருப்பினும் பிரதமர் மோடி ஒருமுறை கூட அங்கு செல்லவில்லை. ஆனால் நாங்கள் மணிப்பூரில் இருந்தே இந்த நடைப்பயணத்தை துவக்கினோம்.
இதையும் படிக்க | குஜராத் படகு விபத்து: 18 பேர் மீது வழக்குப்பதிவு
நாகா ஒப்பந்தம் கொண்டுவருவதில் பாஜக அரசு தோற்றுவிட்டது. இந்த ஒப்பந்தத்தை கொண்டுவருவதாக நரேந்திர மோடி ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு வாக்குறுதி அளித்தார். ஆனால் அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை.” என்று அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வி.பி. சிங்: வரலாறு நினைவுகொள்ள வேண்டிய ஓர் இந்தியப் பிரதமர்

சிலிண்டர் முதல் ஆதார் வரை..! ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள்!

சிக்க வைத்த 238 மணி நேர போன் பேச்சு, சிசிடிவி காட்சி! புணே கொலையில் காதலனுடன் சிக்கிய இளம்பெண்ணின் சூப்பர் பிளான்!
என்எல்சி பங்கு விற்பனை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
விடியோக்கள்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani

UN Kannan Interview | விஜய், உதயநிதி மோதல் தொடர்ந்தால்...? | CM Vijay | TVK | Udhayanidhi | DMK

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP



