

ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நில மோசடி தொடர்பான வழக்கில் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அளித்திருந்தது. ஆனால் ஹேமந்த் சோரன் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இந்த நிலையில், தில்லியில் உள்ள ஹேமந்த் சோரனின் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் இன்று அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து ஜார்க்கண்ட் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.