தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு 5-வது முறையாக அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் பாஜக, அரவிந்த கேஜரிவாலை விசாரணைக்கு ஆஜராகுமாறு அறிவுறுத்தியுள்ளது.
தில்லி பாஜக தலைவர் வீரேந்திரா சச்தேவா, “அமலாக்கத்துறை முன்பு விசாரணைக்கு ஆஜராவதே தில்லி முதல்வருக்கு நாங்கள் வலியுறுத்துவது. அரசியலமைப்பு பதவியில் இருப்பவர் அரவிந்த் கேஜரிவால். ஆம் ஆத்மி சென்ற முறை செய்தது போல விசாரணை தேதியில் அவருக்கு வேறு ஏதேனும் பயணத்திட்டம் உருவாக்குகிறார்களா எனப் பார்ப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
தில்லி மதுபான ஊழல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு கடந்த நான்கு மாதங்களில் அமலாக்கத்துறை 5 முறை சம்மன் அனுப்பியுள்ளது. முந்தைய 4 சம்மன்களை தில்லி முதல்வர் தவிர்த்தார்.
இதையும் படிக்க: ஞானவாபி மசூதி: ஹிந்துக்கள் வழிபாடு நடத்த அனுமதி!
ஜன.13 அன்று நான்காவது சம்மன் ஜன.18-ம் தேதி ஆஜராகுமாறு பிறப்பிக்கப்பட்டது. அந்த தேதிகளில் தில்லி முதல்வர் கோவாவுக்கு மூன்று நாள் பயணம் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சமந்தாவிற்கு கைகொடுத்ததா அதிரடி ஆக்ஷன்? எங்கள் தங்கம் திரை விமர்சனம்
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!

ஃபிஃபா ஆடவர் உலகக் கோப்பை வரலாற்றில் மீண்டும் பெண் நடுவர்கள்!

ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம்
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK


