நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கேஜரிவாலுக்கு நாங்கள் அறிவுறுத்துவது... : பாஜக

அமலாக்கத்துறை தில்லி முதல்வருக்கு சம்மன் அனுப்பியது தொடர்பாக அந்த மாநில பாஜக கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

News image

வீரேந்திரா சச்தேவா | கோப்பு

Updated On :31 ஜனவரி 2024, 5:30 pm IST

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு 5-வது முறையாக அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் பாஜக, அரவிந்த கேஜரிவாலை விசாரணைக்கு ஆஜராகுமாறு அறிவுறுத்தியுள்ளது.

தில்லி பாஜக தலைவர் வீரேந்திரா சச்தேவா,  “அமலாக்கத்துறை முன்பு விசாரணைக்கு ஆஜராவதே தில்லி முதல்வருக்கு நாங்கள் வலியுறுத்துவது. அரசியலமைப்பு பதவியில் இருப்பவர் அரவிந்த் கேஜரிவால். ஆம் ஆத்மி சென்ற முறை செய்தது போல விசாரணை தேதியில் அவருக்கு வேறு ஏதேனும் பயணத்திட்டம் உருவாக்குகிறார்களா எனப் பார்ப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

தில்லி மதுபான ஊழல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு கடந்த நான்கு மாதங்களில் அமலாக்கத்துறை 5 முறை சம்மன் அனுப்பியுள்ளது. முந்தைய 4 சம்மன்களை தில்லி முதல்வர் தவிர்த்தார்.

ஜன.13 அன்று நான்காவது சம்மன் ஜன.18-ம் தேதி ஆஜராகுமாறு பிறப்பிக்கப்பட்டது. அந்த தேதிகளில் தில்லி  முதல்வர் கோவாவுக்கு மூன்று நாள் பயணம் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.