தனிப்பட்ட முறையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தேவையானது என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூறுவதாக மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று தாக்கல் செய்யவுள்ளார்.
இந்த மசோதாவை எதிர்த்து வாக்களிக்க காங்கிரஸ், சமாஜவாதி, திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் முடிவு செய்துள்ளன.
இந்த நிலையில், நாடாளுமன்றத்துக்கு வருகைதந்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர்களுடன் பேசியதாவது:
”நாட்டின் நலனுக்காக மக்களவையில் வக்ஃப் திருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. இது வரலாற்று சிறப்புமிக்க நாள். கோடிக்கணக்கான முஸ்லிம் மட்டுமல்ல, முழு நாடும் இந்த மசோதாவை ஆதரிக்கும்.
இந்த மசோதாவை எதிர்ப்பவர்கள் அரசியல் காரணங்களுக்காகவே இதனை செய்கிறார்கள். நான் அவையில் உண்மை காரணங்களை முன்வைப்பேன். அதனை எதிர்ப்பவர்கள் உரிய காரணங்களுடன் எதிர்க்க வேண்டும். அவர்களுக்கு பதிலளிப்போம். முழு தயாரிப்புடனே மசோதாவை தாக்கல் செய்கிறோம்.
சில மதத் தலைவர்கள், கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அப்பாவி முஸ்லிம் மக்களை தவறான வழிநடத்துகிறார்கள். இவர்கள்தான் முஸ்லிம்களின் குடியுரிமை அந்தஸ்தை சிஏஏ பறிக்கும் என்றார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பலரும், எதிர்க்கட்சியினரும் இந்த மசோதா தேவை என்று தனிப்பட்ட முறையில் கூறுகிறார்கள். ஆனால், வாக்கு அரசியலுக்காக இதை எதிர்க்கிறார்கள்” என்றார்.
நாடு முழுவதும் ‘வக்ஃப்’ வாரிய சொத்துளை ஒழுங்குபடுத்த வழிவகுக்கும் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் அறிமுகம் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பைத் தொடா்ந்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது.
மசோதாவை ஆய்வு செய்த நாடாளுமன்ற கூட்டுக் குழு, 655 பக்க அறிக்கையை தயாரித்தது. இதில் சில திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : வக்ஃப் நிலங்களை பாஜக விற்கும்: அகிலேஷ் யாதவ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுபான்மை சமூகத்தினரின் வாழ்க்கைத்தரம் கணிசமாக மேம்பட்டுள்ளது: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

12.6.1976: இந்தியாவுடன் கடல் எல்லையை நிர்ணயிக்க ஸ்ரீலங்கா அரசின் மசோதா

கா்நாடக அரசின் வெறுப்புக் கருத்து தடுப்புச் சட்ட மசோதா தேவையற்றது: மத்திய உள்துறை அமைச்சகம் கருத்து

வெளிநாட்டுப் பயண விவரங்களை ராகுல் தெரிவிக்க வேண்டும்: மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு எச்சரிக்கை
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



