சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சாதகமாக இந்தியா!

வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களை ஈர்க்கும் ஆசிய நாடுகளில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருவதாக ஆய்வில் தகவல்

News image
- ENS
Updated On :4 ஏப்ரல் 2025, 1:23 pm

DIN

வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களை ஈர்க்கும் ஆசிய நாடுகளில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் சீனா, வியட்நாம், தாய்லாந்து நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியா குறைந்த வரிகொண்ட நாடாக உள்ளது. வெளிநாட்டு முதலீட்டு முடிவுகளை வடிவமைப்பதில் கட்டணங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்தியாவின் சராசரி பரஸ்பர கட்டணம் சுமார் 26 சதவிகிதம்; இது 34 சதவிகிகிதம்கொண்ட சீனாவைவிடக் குறைவு. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைக் காட்டிலும், உலகளாவிய முதலீட்டு இடமாக இந்தியா வளர்ச்சியடைவது அதிக கவனத்தைப் பெறுகிறது.

முதலீட்டாளர்களுக்கு சாதகமான சந்தைகளைத் தேடும்போது, செலவு, செயல்திறன், முதலீட்டாளர் நட்பு அணுகுமுறைகளில் இந்தியா சிறப்பு பெறுவதாக முதலீட்டாளர்கள் கூறுகின்றனர்.

எளிய செயல்பாடுகள், குறைந்த செலவுகள், விரைவான வருமானம் ஆகியவைதான், இந்திய சந்தைகளை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றும் காரணிகளாக உள்ளன.

தொடர்ந்து 15 வாரங்களாக, வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வெளியேறியதால், 1.45 டிரில்லியன் டாலர்வரையில் இழப்பு ஏற்பட்ட நிலையில், கடந்த மார்ச் மாத இறுதியில் தலைகீழான நிலைமையை எதிர்கொண்டது.

அதாவது, கடந்த மாத இறுதியில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் மீண்டும் நிகர வாங்குபவர்களாக மாறியது, புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையின் அறிகுறியாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.