தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே! தவெக தலைமையிலான கூட்டணி பெயர் என்ன? செப். 9-ல் அறிவிப்பு பேரவையில் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வருக்கு 3 நாள்களா? அதிமுக விமர்சனம் பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11இல் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை!

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சாதகமாக இந்தியா!

வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களை ஈர்க்கும் ஆசிய நாடுகளில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருவதாக ஆய்வில் தகவல்

ENS

Published On :4 ஏப்ரல் 2025, 6:53 pm IST

வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களை ஈர்க்கும் ஆசிய நாடுகளில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் சீனா, வியட்நாம், தாய்லாந்து நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியா குறைந்த வரிகொண்ட நாடாக உள்ளது. வெளிநாட்டு முதலீட்டு முடிவுகளை வடிவமைப்பதில் கட்டணங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்தியாவின் சராசரி பரஸ்பர கட்டணம் சுமார் 26 சதவிகிதம்; இது 34 சதவிகிகிதம்கொண்ட சீனாவைவிடக் குறைவு. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைக் காட்டிலும், உலகளாவிய முதலீட்டு இடமாக இந்தியா வளர்ச்சியடைவது அதிக கவனத்தைப் பெறுகிறது.

முதலீட்டாளர்களுக்கு சாதகமான சந்தைகளைத் தேடும்போது, செலவு, செயல்திறன், முதலீட்டாளர் நட்பு அணுகுமுறைகளில் இந்தியா சிறப்பு பெறுவதாக முதலீட்டாளர்கள் கூறுகின்றனர்.

எளிய செயல்பாடுகள், குறைந்த செலவுகள், விரைவான வருமானம் ஆகியவைதான், இந்திய சந்தைகளை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றும் காரணிகளாக உள்ளன.

தொடர்ந்து 15 வாரங்களாக, வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வெளியேறியதால், 1.45 டிரில்லியன் டாலர்வரையில் இழப்பு ஏற்பட்ட நிலையில், கடந்த மார்ச் மாத இறுதியில் தலைகீழான நிலைமையை எதிர்கொண்டது.

அதாவது, கடந்த மாத இறுதியில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் மீண்டும் நிகர வாங்குபவர்களாக மாறியது, புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையின் அறிகுறியாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.