மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

2,800 கைதிகளுக்கு ஒரே மருத்துவர்: ஹரியாணா சிறையின் அவலநிலை!

ஹரியாணா சிறையில் மருத்துவர்களின் போதாமை பற்றி..

News image
- கோப்புப் படம்
Updated On :5 ஏப்ரல் 2025, 2:01 pm

DIN

ஹரியாணாவில் உள்ள சிறையில் 2,800-க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு ஒரே மருத்துவர் என்ற நிலை உள்ளது.

ஹரியாணா மாநிலத்தின் குருகிராம் நகரில் உள்ள போன்ட்சி சிறையில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்புக் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணா கோயல் ஆய்வு நடத்தச் சென்றார்.

இந்த ஆய்வில் அங்குள்ள 2,800-க்கும் மேற்பட்ட கைதிகளுக்க்கு ஒரு மருத்துவர் மட்டுமே உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அந்தச் சிறையில் ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே இருப்பதால் கைதிகள் போதிய மருத்துவ வசதிகள் கிடைக்காமல் அவதிப்படுவதாகக் கூறப்படுகிறது.

மேலும், பெண் கைதிகளுக்கு சிகிச்சையளிக்க ஒரு பெண் மருத்துவர் கூட இல்லாதது உடல்நலக் கோளாறால் அவதிப்படும் பெண் கைதிகளின் நிலைமை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

மருத்துவர்களின் போதாமை பற்றி ஒப்புக்கொண்ட சிறைத்துறை அதிகாரிகள் மூன்று மருத்துவ அதிகாரிகளுக்கான இடத்தில் ஒருவர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

ஒரு மருத்துவர் மட்டுமே இருப்பதால் நோய்வாய்ப்பட்ட கைதிகளை குருகிராமில் உள்ள பொது மருத்துவமனைக்கு அவர் அனுப்புவதாகக் கூறப்படுகிறது.

மேலும், அந்தச் சிறையில் கைதிகளின் நலன் குறித்தும், அவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் மற்றும் அவர்கள் நடத்தப்படும் விதம் குறித்தும் பாலகிருஷ்ணா கோயல் கேட்டறிந்தார்.

”போன்ட்சி சிறையில் 2ஜி சிக்னல் ஜாமர்கள் மட்டுமே இருப்பதால், 5ஜி நெட்வொர்க் மொபைல் போன்கள் வேலை செய்கின்றன. இதனைப் பயன்படுத்தி பல கேங்ஸ்டர்கள் சிறை வளாகத்தில் மொபைல் போன்களை பயனபடுத்துகின்றனர்” என்று அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.