பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜெயின் துறவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

ஜெயின் துறவி சாந்திசாகருக்கு பாலியல் வன்கொடுமை வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை.
சாந்திசாகர்
சாந்திசாகர்
Published on
Updated on
1 min read

ஜெயின் துறவி சாந்திசாகருக்கு பாலியல் வன்கொடுமை வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தின் சூரத் நகரிலுள்ள திமாலியாவாத் பகுதியிலிருக்கும் ஜெயின் ஆலயத்தில் துறவியாக இருந்தவர் சாந்திசாகர் (57).

சாந்திசாகரின் பிரசங்கத்தைப் பார்ப்பதற்காக அந்த ஆலயத்துக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 1 அன்று வதோதராவிலுருந்து ஒரு குடும்பத்தினர் கல்லூரியில் படித்துவந்த தங்களது 19 வயது பெண்ணுடன் சென்றிருந்தனர்.

அப்போது, பிரசங்கம் இரவில்தான் நடக்குமென்று தெரிவித்த சாந்திசாகர் அவர்களை அங்கு தங்குமாறு கூறியிருக்கிறார்.

அந்தக் குடும்பத்தினரிடம் சடங்குகளைச் செய்வதாகக் கூறி அவர்களை சந்தனமரக் கட்டைகளால் சூழப்பட்ட வட்டத்திற்குள் அமரச்செய்த சாந்தி சாகர் மந்திரங்களை உச்சரிக்குமாறும் தன்னுடைய அனுமதியின்றி வெளியே வரக்கூடாது என்றும் கூறினார்.

மேலும், அந்தப் பெண்ணை மட்டுமே தனியே அழைத்துச் சென்ற அவர், தன்னை ஒரு நண்பனைப் போல நினைத்துக் கொண்டு பூஜை செய்வதற்காக நிர்வாணமாக புகைப்படம் எடுத்து அனுப்புமாறு கூறியுள்ளார்.

பின்னர், அந்தப் பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதரருக்கு தனித்தனியே அறை அமைத்துக் கொடுத்த சாந்திசாகர் அந்தப் பெண்ணை தனி அறைக்கு அழைத்துச் சென்று “உன் பெற்றோர் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்தாயா? நான் சொல்வதைக் கேட்காவிட்டால் அவர்கள் இறந்துவிடுவார்கள்” எனக் கூறி மிரட்டியிருக்கிறார்.

பின்னர் அந்தப் பெண்ணை அறையில் வைத்து மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். இதனால், அந்தப் பெண்ணின் பிறப்புறுப்பு மற்றும் வயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் சாந்திசாகர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததை வெளியே கூறியதைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சாந்திசாகர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம், மருத்துவ அறிக்கை, 32 சாட்சிகளின் வாக்குமூலம் ஆகியவை இந்த வழக்கை மேலும் வலுப்படுத்தியது.

இந்த நிலையில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு சூரத் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் சாந்திசாகருக்கு இன்று 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் சாந்தி சாகர் சிறையில் இருப்பதால் அவருக்கு இன்னும் 2.5 ஆண்டுகள் மட்டுமே சிறைத் தண்டனை மீதமுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com