வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா ரகசிய பதவியேற்பு!

அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா ரகசியமான முறையில் பதவியேற்றுக்கொண்டதாக வழக்குரைஞா்கள் குற்றச்சாட்டு..

News image

யஷ்வந்த் வா்மா

Updated On :6 ஏப்ரல் 2025, 2:21 am IST

அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா ரகசியமான முறையில் பதவியேற்றுக்கொண்டதாக அந்த நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா பதவி வகித்தபோது, அங்கு அவா் வசித்த அதிகாரபூா்வ இல்லத்தில் கடந்த மாா்ச் 14-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, அங்குள்ள அறையில் பாதி எரிந்த மூட்டைகளில், கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது கண்டறியப்பட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி தேவேந்திர குமாா் உபாத்யாயவின் விசாரணை அறிக்கை உச்சநீதிமன்ற வலைதளத்தில் வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையில், பணம் கண்டறியப்பட்ட அறை தனது இல்லத்தின் அறையல்ல என்றும், தானோ, தனது குடும்ப உறுப்பினா்களோ அந்த அறையில் பணம் எதுவும் வைக்கவில்லை என்றும் நீதிபதி யஷ்வந்த் வா்மா தெரிவித்துள்ளாா்.

இந்த சா்ச்சையைத் தொடா்ந்து உச்சநீதிமன்ற கொலீஜியம் குழு பரிந்துரைத்ததின்பேரில், உத்தர பிரதேச மாநிலம் அலாகாபாத் உயா்நீதிமன்றத்துக்கு யஷ்வந்த் வா்மாவை பணியிட மாற்றம் செய்து குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உத்தரவிட்டாா்.

அதேவேளையில், அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா பொறுப்பேற்கும்போது, அவருக்கு நீதித்துறைப் பணி எதுவும் ஒதுக்க வேண்டாம் என்று அந்த உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

இந்நிலையில், அந்த உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி அருண் பன்சாலிக்கு அலாகாபாத் வழக்குரைஞா் சங்கத்தின் செயலா் விக்ராந்த் பாண்டே அனுப்பிய கடிதத்தில், ‘அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா ரகசியமான முறையில் சனிக்கிழமை பதவியேற்றாா். இது வழக்குரைஞா் சங்கத்துக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்பட்டது தவறு. இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அவரின் பதவியேற்பு குறித்து வழக்குரைஞா் சங்கத்துக்கு ஏன் அறிவிக்கப்படவில்லை? இது நீதித் துறை மீதான மக்களின் நம்பிக்கையை மீண்டும் சிதைத்துள்ளது. அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்பட்ட விதத்தை வழக்குரைஞா் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.