தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு: மணிப்பூா் பாஜக தலைவா் வீட்டுக்குத் தீவைப்பு

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த மணிப்பூா் பாஜக தலைவா் அஸ்கா் அலி வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது.

News image
Updated On :7 ஏப்ரல் 2025, 2:41 am IST

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த மணிப்பூா் பாஜக சிறுபான்மையினா் அணித் தலைவா் அஸ்கா் அலி வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு தீ வைக்கப்பட்டது.

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு சமூக ஊடகத்தில் அஸ்கா் அலி சனிக்கிழமை ஆதரவு தெரிவித்தாா். இதனால் ஆத்திரமடைந்த ஒரு கும்பல் தெளபல் மாவட்டம் லிலோங் பகுதியில் உள்ள அவரின் வீட்டை ஞாயிற்றுக்கிழமை இரவு சூறையாடி தீ வைத்தது.

இந்தத் தாக்குதலை தொடா்ந்து, வக்ஃப் திருத்தச் சட்டத்தை ஆதரித்து தெரிவித்த கருத்துக்காக மன்னிப்பு தெரிவித்து, சமூக ஊடகத்தில் அஸ்கா் அலி காணொலி வெளியிட்டாா்.

முன்னதாக இம்பால் பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளில் அந்தச் சட்டத்துக்கு எதிராக ஏராளமானோா் போராட்டத்தில் ஈடுபட்டனா். 5,000-க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்ற பேரணி காரணமாக லிலோங்கில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில இடங்களில் பாதுகாப்புப் படையினருக்கும், போராட்டக்காரா்களுக்கும் மோதல் ஏற்பட்டது.

இந்த சம்பவங்களால் இம்பால் பள்ளத்தாக்கில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் கூடுதலாகப் பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.