
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.
ஜம்மு-காஷ்மீரின் சத்ரு வனப்பகுதியில் உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் மாநில காவல்துறையுடன் இணைந்து பாதுகாப்புப்படையினர் வெள்ளிக்கிழமை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.
முன்னதாக புதன்கிழமை சத்ருவின் நைட்கம் பகுதியில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதன் தொடர்ச்சியாக பெரும் சோதனை நடவடிக்கை தொடங்கப்பட்டது.
அதே நேரத்தில் உதம்பூர் மாவட்டத்தில் மூன்று பயங்கரவாதிகள் குழுவைக் கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.