ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.
ஜம்மு-காஷ்ர்.
ஜம்மு-காஷ்ர். (File Photo | ANI)
Published on
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.

ஜம்மு-காஷ்மீரின் சத்ரு வனப்பகுதியில் உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் மாநில காவல்துறையுடன் இணைந்து பாதுகாப்புப்படையினர் வெள்ளிக்கிழமை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

குக்கரில் சாதம் வைக்கிறீர்களா? எச்சரிக்கை!!

அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.

முன்னதாக புதன்கிழமை சத்ருவின் நைட்கம் பகுதியில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதன் தொடர்ச்சியாக பெரும் சோதனை நடவடிக்கை தொடங்கப்பட்டது.

அதே நேரத்தில் உதம்பூர் மாவட்டத்தில் மூன்று பயங்கரவாதிகள் குழுவைக் கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com