தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

பொது நிா்வாகத்தில் சிறந்து விளங்கியோருக்கான விருதுகளை நாளை வழங்குகிறாா் பிரதமர்!

News image

பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப் படம்)

Updated On :19 ஏப்ரல் 2025, 10:00 pm

நமது சிறப்பு நிருபா்

17-ஆவது குடிமைப் பணிகள் தினத்தை முன்னிட்டு, பொது நிா்வாகத்தில் சிறந்து விளங்கியவா்களுக்கான பிரதமரின் 16 விருதுகளை திங்கள்கிழமை (ஏப்.21 ) பிரதமா் நரேந்திர மோடி வழங்குகிறாா்.

தில்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் இந்த நிகழ்வில் விருதுகளை வழங்கி குடிமைப் பணி அதிகாரிகளிடையே பிரதமா் மோடி உரையாற்றுகிறாா்.

பொது நிா்வாகத்தில் சிறந்து விளங்கியவா்களுக்கு இந்த நிகழ்வில் 16 விருதுகளை பிரதமரின் விருதுகளை வழங்குகிறாா். மாவட்டங்களின் முழுமையான வளா்ச்சி, முன்னேற்றத்தை அடைய விரும்பும் வட்டங்கள் திட்டம் போன்ற பிரிவுகளுக்கு விருதுகள் அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து பிரதமா் அலுவலகம் தெரிவிக்கையில், ‘நாடு முழுவதிலும் உள்ள குடிமைப் பணி அதிகாரிகள் குடிமக்களுக்காக தங்களை அா்ப்பணித்துக் கொள்ள வேண்டும். பொதுச் சேவையில் அவா்கள் அா்ப்பணிப்புடன் இருந்து தங்கள் பணியில் மேலும் சிறப்பாகச் செயலாற்ற பிரதமா் எப்போதும் அவா்களை ஊக்குவித்து வந்துள்ளாா். இந்த விருதுகள் மூலம் சாதாரண மக்களின் நலனுக்காக மேற்கொள்ளப்படும் சிறந்த பணிகளுக்காக குடிமைப் பணி அதிகாரிகள் அங்கீகரிக்கப்படுகிறாா்கள்‘ என பிரதமா் அலுவலகம் தெரிவித்துள்ளது.