ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

குறைந்த விலையில் 5ஜி! வோடாஃபோன் ஐடியா அதிரடி அறிவிப்பு!

வோடாஃபோன் ஐடியா நிறுவனம் குறைந்த விலையில் 5ஜி திட்டத்துக்கான சலுகைகளை அறிவித்துள்ளது.

News image
Updated On :20 ஏப்ரல் 2025, 4:44 pm IST

வோடாஃபோன் ஐடியா நிறுவனம் குறைந்த விலையில் 5ஜி திட்டத்துக்கான சலுகைகளை அறிவித்துள்ளது.

இந்தியாவில் 5ஜி இணைய சேவையை வோடாஃபோன் ஐடியா நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. தற்போது மும்பையில் மட்டுமே முழு வீச்சில் 5ஜி இணைய சேவையை வழங்கி வருகிறது. படிப்படியாக இணைய சேவையை பயனர்களை அதிகரிக்கும் திட்டத்தையும் இந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

தமிழ்நாடு, கர்நாடகம், பஞ்சாப், பிகார் உள்ளிட்ட இடங்களில் 5ஜி இணைய சேவை வழங்குவதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன.

இதனிடையே சந்தையில் உள்ள பயனர்களைக் கவரும் வகையில், பிரீபெய்ட் திட்டத்தில் ரூ. 299-க்கு 5ஜி இணைய சேவையை வோடாஃபோன் ஐடியா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

போஸ்ட்பெய்ட் திட்டத்தில் மாதத்துக்கு 300ஜிபி இணையத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

தற்போது ஆரம்பக்கட்டமாக குறைந்த விலையில் 5ஜி சேவையை வழங்குகிறது. ரூ. 299-க்கு ரீசார்ஜ் செய்தால், அளவற்ற அழைப்புகள் - நாளொன்றுக்கு 100 குறுஞ்செய்திகள், இவற்றுடன் ஒரு நாளைக்கு 1ஜிபி இணையத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இது 28 நாள்களுக்குப் பொருந்தும்.

பிரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்பட்டுவருவதைப் போன்று, வரம்பற்ற (அன்லிமிடெட்) இணையம் இதில் வழங்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.