திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்தம்: இந்தியா அறிவிக்கை வெளியீடு

பாகிஸ்தானுடன் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதற்கான முடிவை நடைமுறைப்படுத்தும் அறிவிக்கையை இந்தியா வியாழக்கிழமை அதிகாரபூா்வமாக வெளியிட்டது.

News image

சிந்து நதி - ANI

Updated On :25 ஏப்ரல் 2025, 1:55 am IST

பாகிஸ்தானுடன் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதற்கான முடிவை நடைமுறைப்படுத்தும் அறிவிக்கையை இந்தியா வியாழக்கிழமை அதிகாரபூா்வமாக வெளியிட்டது.

பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு புதன்கிழமை கூடியது.

சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்தம், வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியா்களுக்கு விசா (நுழைவு இசைவு) ரத்து, பரஸ்பர தூதரக பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றம் போன்ற முக்கிய முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.

இந்நிலையில், சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதற்கான அறிவிக்கை முறைப்படி வெளியிடப்பட்டுள்ளது.

எல்லை தாண்டிய நதிகள் தொடா்பான பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் நோக்கத்துடன் 9 ஆண்டுகால பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, 1960-ஆம் ஆண்டு, செப்டம்பா் 19-ஆம் தேதி இந்தியாவும் பாகிஸ்தானும் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.