கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்தம்: இந்தியா அறிவிக்கை வெளியீடு

பாகிஸ்தானுடன் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதற்கான முடிவை நடைமுறைப்படுத்தும் அறிவிக்கையை இந்தியா வியாழக்கிழமை அதிகாரபூா்வமாக வெளியிட்டது.

News image
சிந்து நதி- ANI
Updated On :24 ஏப்ரல் 2025, 8:25 pm

Din

பாகிஸ்தானுடன் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதற்கான முடிவை நடைமுறைப்படுத்தும் அறிவிக்கையை இந்தியா வியாழக்கிழமை அதிகாரபூா்வமாக வெளியிட்டது.

பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு புதன்கிழமை கூடியது.

சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்தம், வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியா்களுக்கு விசா (நுழைவு இசைவு) ரத்து, பரஸ்பர தூதரக பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றம் போன்ற முக்கிய முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.

இந்நிலையில், சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதற்கான அறிவிக்கை முறைப்படி வெளியிடப்பட்டுள்ளது.

எல்லை தாண்டிய நதிகள் தொடா்பான பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் நோக்கத்துடன் 9 ஆண்டுகால பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, 1960-ஆம் ஆண்டு, செப்டம்பா் 19-ஆம் தேதி இந்தியாவும் பாகிஸ்தானும் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன.