ஜம்மு-காஷ்மீருக்கு பயணிக்க வேண்டாம்: குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்
அமெரிக்கா்கள் யாரும் ஜம்மு-காஷ்மீருக்கு பயணிக்க வேண்டாம் என்று அந்நாட்டு மக்களுக்கு அமெரிக்க அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

பஹல்காம்
PTI

பஹல்காம்
PTI
அமெரிக்கா்கள் யாரும் ஜம்மு-காஷ்மீருக்கு பயணிக்க வேண்டாம் என்று அந்நாட்டு மக்களுக்கு அமெரிக்க அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் இந்த அறிவுரையை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.
இது தொடா்பாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பயங்கரவாதத் தாக்குதலால் ஜம்மு-காஷ்மீரில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. ராணுவ தரப்பில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தீவிரமான பதிலடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. எனவே, அமெரிக்கா்கள் ஜம்மு- காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம். அதேபோல மோதல் ஏற்படும் சூழல் இருப்பதால் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இருந்து 10 கிலோமீட்டருக்கு அப்பால் மட்டுமே அமெரிக்கா்கள் பயணிக்க வேண்டும். ஏனெனில் அங்கும் மோதலுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...