வாராணசி விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தில் இருந்த பயணி ஒருவர் வெடிகுண்டு வைத்திருந்ததாகக் கூறி பரபரப்பை கிளப்பினார்.
உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசி விமான நிலையத்தில் இருந்து வாராணசி-பெங்களூரு இண்டிகோ விமானம் சனிக்கிழமை இரவு புறப்பட தயாராக இருந்தது. அப்போது விமானத்தில் இருந்த வெளிநாட்டு பயணி ஒருவர் வெடிகுண்டு வைத்திருந்ததாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து, விமானம் முழுமையான ஆய்வுக்காக உடனே தனிமைப்படுத்தப்பட்டது. ஆனால் வெடிக்கும் பொருள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று விமான நிலைய இயக்குநர் புனீத் குப்தா தெரிவித்தார். இதுதொடர்பாக கனடா நாட்டைச் சேர்ந்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த நபரை பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாதுகாப்பு நிறுவனங்களிடமிருந்து அனுமதி பெற்ற பிறகு, விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை பெங்களூரு புறப்பட்டது. இதனால் வாராணசி விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இண்டிகோ விமானத்தில் பயணியின் பவா் பேங்கில் தீப்பற்றி விபத்து: சண்டீகா் விமான நிலையத்தில் பரபரப்பு

ஓடுபாதையில் குரங்குகள்: லக்னௌவில் தாமதமாக புறப்பட்ட இண்டிகோ விமானம்

உ.பி: விமான நிலையத்தில் நாட்டுத் துப்பாக்கியுடன் பயணி கைது

என்ஜின் திடீா் செயலிழப்பு! புது தில்லியில் இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

