இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்: கனடா நாட்டைச் சேர்ந்தவர் கைது

வாராணசி விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தில் இருந்த பயணி ஒருவர் வெடிகுண்டு வைத்திருந்ததாகக் கூறி பரபரப்பை கிளப்பினார்.

News image

இண்டிகோ விமானம். - கோப்புப்படம்.

Updated On :27 ஏப்ரல் 2025, 4:58 pm IST

வாராணசி விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தில் இருந்த பயணி ஒருவர் வெடிகுண்டு வைத்திருந்ததாகக் கூறி பரபரப்பை கிளப்பினார்.

உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசி விமான நிலையத்தில் இருந்து வாராணசி-பெங்களூரு இண்டிகோ விமானம் சனிக்கிழமை இரவு புறப்பட தயாராக இருந்தது. அப்போது விமானத்தில் இருந்த வெளிநாட்டு பயணி ஒருவர் வெடிகுண்டு வைத்திருந்ததாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து, விமானம் முழுமையான ஆய்வுக்காக உடனே தனிமைப்படுத்தப்பட்டது. ஆனால் வெடிக்கும் பொருள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று விமான நிலைய இயக்குநர் புனீத் குப்தா தெரிவித்தார். இதுதொடர்பாக கனடா நாட்டைச் சேர்ந்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த நபரை பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாதுகாப்பு நிறுவனங்களிடமிருந்து அனுமதி பெற்ற பிறகு, விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை பெங்களூரு புறப்பட்டது. இதனால் வாராணசி விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.