மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சாதிவாரிக் கணக்கெடுப்பு: காங்கிரஸ் கொள்கையை ஏற்றது பாஜக - ராகுல்

சாதிவாரிக் கணக்கெடுப்பில் பல முக்கிய கேள்விகளுக்கு பதில் இல்லை என்றார் ராகுல் காந்தி.

News image
Updated On :30 ஏப்ரல் 2025, 2:14 pm

DIN

சாதிவாரிக் கணக்கெடுப்பு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் கொள்கையை பாஜக ஏற்றுள்ளதாக அக்கட்சியின் மக்களவைக் குழு தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை ராகுல் காந்தி இன்று (ஏப். 30) நேரில் சந்தித்தார்.

இதனைத் தொடர்ந்து தில்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய ராகுல் காந்தி, சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்துப் பேசினார்.

ராகுல் காந்தி பேசியதாவது,

''சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தும்படி பலமுறை பாஜக அரசிடம் கேட்டுள்ளோம். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் அழுத்தத்திற்கு மத்திய அரசு தற்போது பணிந்துள்ளது.

சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்திக்காட்டுவோம் என நாடாளுமன்றத்தில் கூறியிருந்தோம். சாதிவாரிக் கணக்கெடுப்பில் செயற்கையாக உருவாக்கப்பட்ட பெரும் சுவர் தடையாகவே உள்ளது. நாட்டில் 4 சாதிகள் மட்டுமே உள்ளதாக பிரதமர் முன்பு பேசியிருந்தார்.

ஆனால், தற்போது என்ன நடந்தது எனத் தெரியவில்லை; 11 ஆண்டுகளுக்குப் பிறகு சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி ஒப்புக்கொண்டுள்ளார்.

சாதிவாரிக் கணக்கெடுப்பில் பல முக்கிய கேள்விகளுக்கு பதில் இல்லை. சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் இதனை நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடவும் அரசு நடத்த வேண்டும்.

இதற்கு கால நிர்ணயம் செய்ய வேண்டியது அவசியம். அதாவது எப்போது சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடங்கி முடிக்கப்படும் என்பதை அறிவிக்க வேண்டும். இந்தக் கணக்கெடுப்பின் மூலம் நாட்டிலுள்ள 90% மக்கள் அதிகார பலத்தைப் பெறுவார்கள்.

சாதிவாரிக் கணக்கெடுப்பில், முன்னோடியாக தெலங்கானா மாநிலம் உள்ளது. இதனை எப்படி நடத்தி முடிக்க வேண்டும் என்பதற்கான செயல் திட்டம் அம்மாநிலத்திடம் உள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு நாங்கள் உதவத் தயாராக இருக்கிறோம்.

சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த தெலங்கானா, பிகார் என இரு மாநிலங்கள் உதாரணங்களாக உள்ளன. ஆனால் இரண்டுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது'' எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.