மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டு இன்னொரு இளம்பெண்ணுடன் லிவ்-இன்-டுகெதர் முறையில் வாழ்க்கை நடத்திய நபரை அந்தப் பெண் குத்திக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
42 வயதான ஹரீஷ் தில்லியை அடுத்த குருகிராமில் வசித்து வந்தார். ஏற்கெனவே திருமணமாகி குழந்தை பெற்று தந்தையான அவருக்கு 27 வயதான ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் தில்லியின் அசோக் விஹாரில் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். கடந்த ஓராண்டாக இருவரும் திருமணம் செய்யாமலேயே குடும்பம் நடத்தி வந்தனர்.
இதனிடையே, தன் மனைவி, குழந்தைகளை அவ்வப்போது ஹரீஷ் பார்க்கச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவருடைய இணை, அவருடன் அடிக்கடி வாக்குவாதம் செய்துள்ளார்.
இந்தநிலையில், கடந்த சனிக்கிழமை இருவருக்குமிடையே சண்டை முற்றியது. அதில் அவரை கத்தியால் சரமாரியாக அந்த இளம்பெண் குத்தினார். அதில் படுகாயமடைந்த ஹரீஷ் உயிரிழந்தார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Summary
A woman in Gurugram stabbed her live-in partner as a days-long dispute allegedly over him meeting his wife and children continued to escalate. He died during treatment.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குழந்தையின்மைக்கு சூனியம் வைத்ததாக சந்தேகம்! ஜார்க்கண்டில் பெண் அடித்துக் கொலை!

கணவன் - மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்? சுதா மூர்த்தி கூறும் 5 விஷயங்கள்!

கரூர் அருகே மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை: போலீசார் விசாரணை

பைக் மீது காா் மோதி விபத்து: கணவன் கண்முன் மனைவி உயிரிழப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


