திரிணமூல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா தனக்கு ஹிந்தி நடிகர் பங்கஜ் திரிபாதி மீது அதீதமான ஈர்ப்பு (க்ரஷ்) இருந்ததாகக் கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தில் தனது அனல்பறக்கும் பேச்சினால் பிரபலமானவர் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா.
சமீபத்தில் இவருக்கும் பிஜு ஜனதா தளக் கட்சி முன்னாள் எம்.பி. பினாகி மிஸ்ராவுக்கு திருமணம் நடந்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில், ஆங்கில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் பேசியதாவது:
எனக்கு பங்கஜ் திரிபாதி மீது க்ரஷ்
முன்னாபய்யா இணையத் தொடரை நான் பார்த்துள்ளேன். அதை மீண்டும் பார்ப்பேன். விக்கே டோனர் பார்த்திருக்கிறேன். அந்தப் படமும் பிடிக்கும்.
எனக்கு பங்கஜ் திரிபாதி மிகவும் பிடிக்கும். அவரது மிர்ஜபூர் தொடரை முழுவதுமாகப் பார்த்துள்ளேன். அவருக்கு நான் வாய்ஸ் - நோட்ஸ் (குரல் பதிவு) அனுப்பியிருந்தேன். ஆனால், அவர் அதற்கு இதுவரை பதிலளிக்கவில்லை.
எனக்கு பங்கஜ் திரிபாதி மீது க்ரஷ். அவர் மிகவும் கூலான ஒரு நடிகர் என நினைக்கிறேன். அவர் வில்லனாக நடிப்பது மிகவும் பிடிக்கும். கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூரைவிட மிர்ஜாபூரில் அதிகமாக பிடிக்கும்.
குரல் பதிவுக்குப் பதிலளிக்காத பங்கஜ்
அவருக்கு அனுப்பிய குரல் பதிவில் நான் உங்களின் மிகப்பெரிய ரசிகை. உங்களுடன் ஒரு காஃபி குடிக்க வேண்டுமென எழுதினேன். அவர் அலிபாவில் வசிக்கிறார். யாருடனும் காஃபி குடிக்க செல்வதில்லை.
ஒருமுறை எம்பியும் நடிகருமான ரவி கிஷன் பங்கஜிடன் போன் செய்து கொடுத்தார். என்னால் சரியாக பேச முடியவில்லை. அவருக்கு அளித்த வாய்ஸ் - நோட்ஸ் (குரல் பதிவு) குறித்தும் மறந்துவிட்டேன் எனக் கூறினார்.
ஏற்கெனவே, டென்மார்க் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து விவாகரத்து செய்துவிட்டார்.
பின்னர் வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் என்பவருடன் 3 ஆண்டுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லையில் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 50 காங்கிரஸாா் கைது

புதிய பொறுப்பாளருடன் தமிழகம், புதுச்சேரி காங்கிரஸ் தலைவா்கள் சந்திப்பு

6 வது நாளாக சோனம் வாங்சுக் உண்ணாவிரதம்! திரிணமூல் எம்பி மஹுவா மொய்த்ரா நேரில் ஆதரவு!

அரசியல் வன்முறையை பாஜக தூண்டுகிறது: அகிலேஷ் குற்றச்சாட்டு!
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



