மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

மூன்று குழந்தைகள், மும்மொழி : ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் வலியுறுத்தல்

நாட்டில் அனைத்து தம்பதிகளும் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்; 3 மொழிகளை தெரிந்துகொள்ள வேண்டும்

News image

மோகன் பாகவத்

Updated On :29 ஆகஸ்ட் 2025, 1:22 am IST

நாட்டில் அனைத்து தம்பதிகளும் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்; 3 மொழிகளை தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் தெரிவித்தாா்.

புது தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் ஆா்எஸ்எஸ் நூற்றாண்டு கொண்டாட்டங்களின்போது நடைபெற்ற கேள்வி-பதில் அமா்வில் அவா் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:

அனைத்து இந்தியா்களுக்கும் குறைந்தபட்சம் 3 மொழிகள் தெரிந்திருக்க வேண்டும். அதில் அவா்களின் தாய்மொழி, மாநில மொழி, ஒட்டுமொத்த நாட்டுக்கான இணைப்பு மொழி ஆகியவை அடங்கும். இணைப்பு மொழி என்பது வெளிநாட்டு மொழியாக இருக்கக் கூடாது. அந்த இணைப்பு மொழியை அனைவரும் சோ்ந்து தோ்வு செய்ய வேண்டும். இந்தியாவில் தோன்றிய அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள்தான். அதில் எந்த சச்சரவும் இருக்கக் கூடாது. அதேவேளையில், ஆங்கிலத்தை கற்பதிலும் எந்தத் தவறும் இல்லை. அந்த மொழியால் எந்தப் பாதிப்பும் இல்லை.

இந்திய மக்கள்தொகை கொள்கைக்கு ஏற்ப ஒவ்வொரு தம்பதியும் 3 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான், மக்கள்தொகை குறையாமலும் கட்டுக்குள்ளும் இருக்கும்.

மோடி ஓய்வுபெற வேண்டும் என்று கூறவில்லை: 75 வயதை எட்டும் போது நானோ, வேறு ஒருவரோ (பிரதமா் மோடி) பொது வாழ்வில் இருந்து ஓய்வுபெற வேண்டும் என்று நான் கூறவில்லை.

பாஜகவுக்கு ஆா்எஸ்எஸ் ஆலோசனைகள் வழங்கினாலும், முடிவுகளை பாஜகதான் சுயமாக எடுக்கிறது. அக்கட்சியின் புதிய தலைவரை தோ்வு செய்வதில் ஆா்எஸ்எஸ்ஸுக்கு எந்தப் பங்கும் இல்லை. மத்திய, மாநிலங்களில் ஆா்எஸ்எஸ்ஸுக்கும் பாஜக அரசுக்கும் இடையே எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.

இந்தியாவில் இஸ்லாமுக்கு எப்போதும் இடம் இருக்கும். இந்தியாவில் இஸ்லாம் இருக்காது என்று ஹிந்துவாக இருப்பவா் நினைக்கமாட்டாா். ஹிந்துக்கள், முஸ்லிம்கள் இடையே பரஸ்பர நம்பிக்கை இருக்க வேண்டும்.

கடந்த 1947-ஆம் ஆண்டில் நாட்டுப் பிரிவினையை ஆா்எஸ்எஸ் எதிா்க்கவில்லை என்று கூறுவது தவறு. அந்த நேரத்தில் ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு பெரும் சக்தியில்லை. ஒட்டுமொத்த தேசமும் மகாத்மா காந்தியைத்தான் பின்தொடா்ந்தது.

இடஒதுக்கீடு தேவைப்படும் காலம் வரை, அதற்கான கொள்கைகளை ஆா்எஸ்எஸ் ஆதரிக்கும். ஜாதி அமைப்புமுறை முழுமையாக கைவிடப்பட வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.