இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

தேசிய கல்விக் கொள்கையில் தாய்மொழி கல்விக்கு முக்கியத்துவம்: கேரள ஆளுநர்

தாய்மொழியில் கல்வி பயில தேசிய கல்விக் கொள்கை உதவும்: கேரள ஆளுநர்

கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - @KeralaGovernor

Published On :2 டிசம்பர் 2025, 6:53 pm IST

திருவனந்தபுரம்: தேசிய கல்விக் கொள்கையில் தாய்மொழி கல்விக்கு முக்கியத்துவம் தரப்ப்டுகிறது; தாய்மொழியில் கல்வி பயில தேசிய கல்விக் கொள்கை பேருதவிகரமாக இருக்கும் என்று கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவின் முதல் ரயில்வே அமைச்சரான ஜான் மத்தாயின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எழுதப்பட்ட புத்தக வெளியீட்டு விழா இன்று(டிச. 2) திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்நிக்ழச்சியில் சிறப்பு விருந்தினராக கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்துகொண்டார்.

இந்த விழாவில் அவர் தாய்மொழியின் முக்கியத்துவம் குறித்து சுட்டிக்காட்டிப் பேசினார். அப்போது அவர் குறிப்பிடுகையில், ‘மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையானது மாணவர்கள் தங்கள் தாய்மொழிகளில் கல்வி பயில்வதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும்’ என்றார்.

மேலும், ‘கேரள பல்கலைக்கழத்தின் முன்னாள் துணை வேந்தராக பதவி வகித்த மத்தாய் இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சராகவும் இருந்தவர் என்பதையும், அவர் சிறந்த நேர்மைக்குச் சொந்தக்காரர்’ என்றும் தமது உரையில் ஆளுநர் குறிப்பிட்டார். சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியாவின் வளர்ச்சிக்கு கேரளத்தின் பல்வேறு அறிஞர்கள் பல விதங்களிலும் உதவி புரிந்திருப்பதாகவும் கேரளத்துக்கு ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் புகழாரம் சூட்டினார்.

Summary

Kerala Governor Rajendra Vishwanath Arlekar on Tuesday underscored the importance of mother tongue in education, saying the Centre's National Education Policy gives due weight to learning native languages.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.