மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

தேசிய கல்விக் கொள்கையில் தாய்மொழி கல்விக்கு முக்கியத்துவம்: கேரள ஆளுநர்

தாய்மொழியில் கல்வி பயில தேசிய கல்விக் கொள்கை உதவும்: கேரள ஆளுநர்

News image
கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்- @KeralaGovernor
Updated On :2 டிசம்பர் 2025, 1:19 pm

இணையதளச் செய்திப் பிரிவு

திருவனந்தபுரம்: தேசிய கல்விக் கொள்கையில் தாய்மொழி கல்விக்கு முக்கியத்துவம் தரப்ப்டுகிறது; தாய்மொழியில் கல்வி பயில தேசிய கல்விக் கொள்கை பேருதவிகரமாக இருக்கும் என்று கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவின் முதல் ரயில்வே அமைச்சரான ஜான் மத்தாயின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எழுதப்பட்ட புத்தக வெளியீட்டு விழா இன்று(டிச. 2) திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்நிக்ழச்சியில் சிறப்பு விருந்தினராக கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்துகொண்டார்.

இந்த விழாவில் அவர் தாய்மொழியின் முக்கியத்துவம் குறித்து சுட்டிக்காட்டிப் பேசினார். அப்போது அவர் குறிப்பிடுகையில், ‘மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையானது மாணவர்கள் தங்கள் தாய்மொழிகளில் கல்வி பயில்வதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும்’ என்றார்.

மேலும், ‘கேரள பல்கலைக்கழத்தின் முன்னாள் துணை வேந்தராக பதவி வகித்த மத்தாய் இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சராகவும் இருந்தவர் என்பதையும், அவர் சிறந்த நேர்மைக்குச் சொந்தக்காரர்’ என்றும் தமது உரையில் ஆளுநர் குறிப்பிட்டார். சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியாவின் வளர்ச்சிக்கு கேரளத்தின் பல்வேறு அறிஞர்கள் பல விதங்களிலும் உதவி புரிந்திருப்பதாகவும் கேரளத்துக்கு ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் புகழாரம் சூட்டினார்.

summary

Kerala Governor Rajendra Vishwanath Arlekar on Tuesday underscored the importance of mother tongue in education, saying the Centre's National Education Policy gives due weight to learning native languages.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.