ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

புதிய விதிகளை அமல்படுத்த அவகாசம் கோரிய இண்டிகோ!

புதிய விதிகளை அமல்படுத்த இண்டிகோ அவகாசம் கோரியது பற்றி...

News image
இண்டிகோ விமானம்(கோப்புப்படம்) - ANI
Updated On :5 டிசம்பர் 2025, 4:26 am

இணையதளச் செய்திப் பிரிவு

விமானப் பணிநேரம் மற்றும் ஓய்வு தொடர்பான புதிய விதிகளை அமல்படுத்த சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திடம் இண்டிகோ நிறுவனம் அவகாசம் கோரியுள்ளது.

விமானப் பணியாளா்களுக்கு குறிப்பாக, விமானிகளுக்குத் தற்போது நடைமுறைக்கு வந்துள்ள புதிய, கடுமையான ‘விமானப் பணிநேரம் மற்றும் ஓய்வு விதிகளை’ (எஃப்டிடிஎல்) பின்பற்றுவதற்கு ஏற்ற போதிய எண்ணிக்கையில் விமானிகள் இண்டிகோவிடம் இல்லை.

இதனால் இண்டிகோ விமானச் சேவை கடந்த சில நாள்களாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாள்களில் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், விமான நிலையங்களுக்கு வந்த பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் குவிந்துள்ள இண்டிகோ விமானப் பயணிகளால் அசாதாரண சூழல் நிலவுகிறது.

இண்டிகோ விமான சேவையில் நிலவும் குழப்பம் குறித்தும், இந்தப் பிரச்னையை உடனடியாக சரிசெய்வதற்கான திட்டத்தைச் சமா்ப்பிக்குமாறு அந்நிறுவனத்திடம் அரசு வலியுறுத்தியிருந்தது.

இதற்கு பதிலளித்து இண்டிகோ நிறுவனம், ”எஃப்டிடிஎல் விதிகளை அமல்படுத்தும் நடைமுறையில் இண்டிகோ நிறுவனம் பணியாற்றி வருகின்றது. ஆனால், பயணிகளின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு பிப். 10, 2026 வரை புதிய விதிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். பிப். 10, 2026 முதல் எஃப்டிடிஎல் விதிகள் முழுமையாக பின்பற்றப்படும் என்று உறுதி அளிக்கிறோம்” என அரசிடம் தெரிவித்துள்ளது.

இண்டிகோ நிறுவனத்தின் கோரிக்கை தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விரைவில் முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

summary

IndiGo seeks time to implement new rules!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.