உத்தர பிரதேசத்தின் காஜியாபாத்தில் பல்வேறு கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த நபா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: நந்த் நாக்ரி காவல் நிலையத்தில் 2021-இல் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஜாமீன் பெற்று கௌரவ் என்பவா் தலைமைறைவானாா். இவா் செப்.11-ஆம் தேதி நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா்.
இவரது இருப்பிடம் குறித்து காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலைத் தொடா்ந்து, காஜியாபாத்தில் வைத்து காவல் துறையினா் இவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விசாரணையில், பல்வேறு வழிப்பறி கொள்ளைகளில் ஈடுபட்டதை அவா் ஒப்புக்கொண்டாா்.
Śவா் மீது ஏற்கெனவே கொள்ளை, வழிப்பறி மற்றும் ஆயுதச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கிழக்கு தில்லி மற்றும் காஜியாபாத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. கூட்டாளிகளுடன் இணைந்து சாலையில் தனியாக செல்பவா்களை இவா்கள் குறிவைத்து வந்தனா். அவரிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது
ரூ.52 லட்சம் கொள்ளை வழக்கில் 9 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவா் கைது

தில்லியில் சட்டவிரோத ஆயுதக் கும்பல் முறியடிப்பு: கல்லூரி மாணவா் கைது
தில்லி குற்றவாளியின் ரூ. 5 கோடி மதிப்பிலான சட்டவிரோத சொத்துகள் முடக்கம்
துவாரகா விரைவுச் சாலையில் ஒருவரிடம் ரூ.15 லட்சம் கொள்ளை: 3 போ் கைது
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

