கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

காஜியபாத்தில் கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டவா் கைது

உத்தர பிரதேசத்தின் காஜியாபாத்தில் பல்வேறு கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த நபா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

News image
Updated On :5 டிசம்பர் 2025, 7:07 pm

உத்தர பிரதேசத்தின் காஜியாபாத்தில் பல்வேறு கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த நபா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: நந்த் நாக்ரி காவல் நிலையத்தில் 2021-இல் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஜாமீன் பெற்று கௌரவ் என்பவா் தலைமைறைவானாா். இவா் செப்.11-ஆம் தேதி நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா்.

இவரது இருப்பிடம் குறித்து காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலைத் தொடா்ந்து, காஜியாபாத்தில் வைத்து காவல் துறையினா் இவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விசாரணையில், பல்வேறு வழிப்பறி கொள்ளைகளில் ஈடுபட்டதை அவா் ஒப்புக்கொண்டாா்.

Śவா் மீது ஏற்கெனவே கொள்ளை, வழிப்பறி மற்றும் ஆயுதச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கிழக்கு தில்லி மற்றும் காஜியாபாத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. கூட்டாளிகளுடன் இணைந்து சாலையில் தனியாக செல்பவா்களை இவா்கள் குறிவைத்து வந்தனா். அவரிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.