டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

காஜியபாத்தில் கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டவா் கைது

உத்தர பிரதேசத்தின் காஜியாபாத்தில் பல்வேறு கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த நபா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

News image
Updated On :5 டிசம்பர் 2025, 9:02 pm

தினமணி செய்திச் சேவை

உத்தர பிரதேசத்தின் காஜியாபாத்தில் பல்வேறு கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த நபா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: நந்த் நாக்ரி காவல் நிலையத்தில் 2021-இல் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஜாமீன் பெற்று கௌரவ் என்பவா் தலைமைறைவானாா். இவா் செப்.11-ஆம் தேதி நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா்.

இவரது இருப்பிடம் குறித்து காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலைத் தொடா்ந்து, காஜியாபாத்தில் வைத்து காவல் துறையினா் இவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விசாரணையில், பல்வேறு வழிப்பறி கொள்ளைகளில் ஈடுபட்டதை அவா் ஒப்புக்கொண்டாா்.

Śவா் மீது ஏற்கெனவே கொள்ளை, வழிப்பறி மற்றும் ஆயுதச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கிழக்கு தில்லி மற்றும் காஜியாபாத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. கூட்டாளிகளுடன் இணைந்து சாலையில் தனியாக செல்பவா்களை இவா்கள் குறிவைத்து வந்தனா். அவரிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.