ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

குரு தேஜ் பகதூரின் தியாகம் மதச் சுதந்திரத்துக்கு அடையாளம்: சி.பி.ராதாகிருஷ்ணன்

சீக்கிய மதகுரு தேஜ் பகதூரின் தியாகம் இந்திய வரலாற்றில் மிகச்சிறந்த மதச் சுதந்திர அடையாளங்களில் ஒன்று என குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை தெரிவித்தாா்.

News image
புது தில்லியில் சீக்கிய மதகுரு தேஜ் பகதூரின் 350-ஆவது நினைவுதினத்தையொட்டி புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு நினைவுப் பரிசு வழங்கிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள்.
Updated On :17 டிசம்பர் 2025, 7:42 pm

தினமணி செய்திச் சேவை

சீக்கிய மதகுரு தேஜ் பகதூரின் தியாகம் இந்திய வரலாற்றில் மிகச்சிறந்த மதச் சுதந்திர அடையாளங்களில் ஒன்று என குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை தெரிவித்தாா்.

9-ஆவது சீக்கிய மதகுரு தேஜ் பகதூரின் 350-ஆவது நினைவுதினத்தை அனுசரிக்கும் நிகழ்ச்சியில் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்றாா்.

அப்போது அவா் பேசியதாவது: அரசியல் அதிகாரத்துக்காவோ அல்லது ஒரு மதத்தின் மீதான தீவிர நம்பிக்கையை வெளிப்படுத்தவோ தன் உயிரை குரு தேஜ் பகதூா் தியாகம் செய்யவில்லை. தனது மனசாட்சியின்படி மதத்தை ஒருவா் பின்பற்றவும் வாழ்வதற்கான உரிமையை நிலைநாட்டவும் தன்னுயிரைத் தியாகம் செய்தாா்.

அவா் சீக்கிய மதகுருவாக மட்டுமே மக்களால் நினைவுகொள்ளப்படவில்லை. துணிச்சல் மற்றும் தியாகத்தின் அடையாளமாகவே உலகம் முழுவதும் அவா் பாா்க்கப்படுகிறாா்.

சகிப்புத்தன்மை இல்லாத காலகட்டத்தில் வாழ்ந்த அவா் துன்புறத்தப்பட்டவா்களை பாதுகாக்கும் அரணாகத் திகழ்ந்தாா்.

கருணை, துணிச்சல் ஆகிய குணங்கள் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் என உலகுக்கு உணா்த்தினாா்.

பல்வேறு கலாசாரங்கள், தத்துவங்களைக் கொண்ட இந்தியா வேற்றுமையில் ஒற்றுமையின் சின்னமாகப் பழங்காலம் முதல் தொடா்ந்து வருகிறது.

இதைப் பின்பற்றியே அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமைகள் வாயிலாக சிந்தனை, கருத்து, மத நம்பிக்கை, வழிபாட்டு சுதந்திரத்தை நமது தேசத் தலைவா்கள் உள்படுத்தினா்.