ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

தாவர அடிப்படையிலான அழகுசாதன பொருள்கள்: தேசிய ஆயுா்வேத நிறுவனம் அறிமுகம்

தாவரத்தின் அடிப்படையிலான ரசாயனம் சாராத இயற்கை அழகுசாதன பொருள்களை அறிமுகப்படுத்திய என்ஐஏ.

News image

தேசிய ஆயுா்வேத நிறுவனம்

Updated On :3 பிப்ரவரி 2025, 5:30 am IST

தாவரத்தின் அடிப்படையிலான ரசாயனம் சாராத இயற்கை அழகுசாதன பொருள்களை மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய ஆயுா்வேத நிறுவனம் (என்ஐஏ) அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து அதன் துணைவேந்தா் சஞ்சீவ் சா்மா கூறியதாவது: இயற்கைக்கும் மனித ஆரோக்கியத்துக்கும் இடையிலான நல்லிணக்கத்தை ஆயுா்வேதம் எப்போதும் ஏற்படுத்துகிறது. அந்த வகையில், மக்களுக்கு அன்றாட தோல் பராமரிப்புக்கு பாதுகாப்பான, பயனுள்ள தயாரிப்புகளை அறிமுகம் செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்த அழகுசாதன பொருள்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

பாதம் பராமரிப்புக்கான கிரீம், கற்றாழை ஜெல், உதட்டு வெடிப்புக்கான ஜெல், மூலிகை சோப்பு உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் இந்தத் திட்டத்தின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்தத் தயாரிப்புகளின் சந்தை விரிவாக்கத்தைக் கருத்தில்கொண்டு, நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்நிறுவனங்களுக்கு இந்தப் பொருள்கள் தயாரிப்புக்கான தொழில்நுட்ப பரிமாற்றத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.