இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

தில்லி தேர்தல்: 44 தொகுதிகளில் பாஜக முன்னிலை

தில்லி தேர்தலில் 44 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது.

News image

வாக்கு எண்ணிக்கை - Center-Center-Vijayawada

Updated On :8 பிப்ரவரி 2025, 9:01 am IST

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. இதில் பாஜக 44 இடங்களிலும் ஆம் ஆத்மி 25 இடங்களிலும் முன்னிலையில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில், ஆம் ஆத்மி கட்சி 4-ஆவது முறையாக ஆட்சி அமைக்குமா? அல்லது 27 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய தலைநகரில் பாஜக ஆட்சி அமைக்குமா என்பதை தோ்தல் முடிவுகள் தீா்மானிக்கவிருக்கிறது.

முதற்கட்ட வாக்கு எண்ணிக்கை நிலவரத்திலிருந்தே பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆட்சியமைக்க தேவையான இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.

அதாவது தில்லி பேரவைக்கு மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 36 தொகுதிகளில் வெற்றிபெற்றால் ஆட்சியமைக்க முடியும். தற்போது பாஜக 44 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

அதேவேளையில் தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி, 32 இடங்களில் முன்னிலையில் இருந்தநிலையில் தற்போது பின்னடைவை சந்தித்து 25 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.