ஜார்க்கண்ட் வினாத் தாள் கசிவு: ஹேமந்த் சோரன் பதவி விலகக் கோரி ஆக.20-ல் போராட்டம்!கோவை, பாலக்காடு ரயில் நிலைய குடிநீரில் ‘ஈ கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையில் குற்றச்சாட்டு!வந்தே மாதரம் சா்ச்சை: சோனியா மீது போலீஸில் பாஜக புகார்!சிலிண்டர் வாடிக்கையாளா்களின் விவரம் சரிபார்ப்பு: ஆக. 23 வரை அவகாசம்!‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தின் கீழ் நீா்நிலைகள் தூா்வாரும் பணி இன்று தொடக்கம்!
/

தில்லி தேர்தல் நிலவரம் பற்றி தெரியாது: பிரியங்கா பதில்

தில்லி தேர்தல் நிலவரம் பற்றி தெரியாது என பிரியங்கா பதிலளித்துள்ளார்.

News image

பிரியங்கா காந்தி

Updated On :8 பிப்ரவரி 2025, 11:00 am IST

கேரள மாநிலம் கன்னூர் வந்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி, தில்லி தேர்தல் நிலவரம் பற்றி தெரியாது என்று பதிலளித்துள்ளார்.

தில்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், பாஜக முன்னிலை வகித்து வருகிறது. ஆம் ஆத்மி பின்னடைவை சந்தித்திருக்கும் நிலையில் காங்கிரஸ் ஒரு இடத்தில்கூட முன்னிலை பெறவில்லை.

இந்த நிலையில், கன்னூரில் செய்தியாளர்கள், பிரியங்காவிடம், தில்லி தேர்தல் நிலவரம் பற்றி கேட்டதற்க, அது பற்றி எனக்குத் தெரியாது, தேர்வு முடிவுகளை நான் அறிந்துகொள்ளவில்லை என்று பதிலளித்துள்ளார்.

11 மணி நிலவரப்படி, தில்லியில் 39 இடங்களில் பாஜகவும், 30 இடங்களில் ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளது. தில்லியின் அடுத்த முதல்வர் பாஜகவைச் சேர்ந்தவர்தான் என்று தில்லி பாஜக தலைவர் விரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளார்.

ஒரு பக்கம் புது தில்லியில் பாஜக ஆட்சியமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகவிட்ட நிலையி, காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வெல்ல முடியாமல் கூட போகலாம். ஆனால், 70 தொகுதிகளில் அதிக இடங்களில், ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக வெற்றி பெறுவதற்கு காங்கிரஸ் தான் காரணமாக இருந்திருக்கும் என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.