/

உடலுறவு குறித்து சர்ச்சை கருத்து: மக்களை சிரிக்க வைப்பதே குறிக்கோள்! யூடியூபர் விளக்கம்

சமய் ரெய்னாவின் விளக்கப் பதிவு...

News image

படம் | சமய் ரெய்னா இன்ஸ்டாகிராம்

Updated On :12 பிப்ரவரி 2025, 9:30 pm IST

நகைச்சுவை நடிகர் சமய் ரெய்னாவின் இந்தியாஸ் காட் லேடண்ட் என்ற நிகழ்ச்சியில் பார்வையாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த ரன்வீர் அல்லபாடியா, 'பெற்றோர் உடலுறவு’ கொள்வது குறித்து அவர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையானது. இந்த விடியோ சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டது.

கேலி என நினைத்து இந்திய கலாசாரத்தை அவமதிக்கும் விதத்திலும் மற்றவர்களைப் புண்படுத்தும் விதத்திலும் பேசியுள்ளதாக பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே குடும்ப அமைப்புகளை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளதாக ரன்வீர், அபூர்வா உள்ளிட்ட யூடியூபர்கள் மீது உச்சநீதிமன்ற வழக்குரைஞர் புகார் அளித்துள்ளார். இவ்விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது.

இந்த நிலையில், சமய் ரெய்னா இன்று(பிப். 12) வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “எனக்கு இப்போது ஏற்பட்டுள்ளவற்றை என்னால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. இந்தியாவின் காட் லேடண்ட் காணொலிகள் அனைத்தையும் எனது யூடியூப் சேனலிலிருந்து நீக்கிவிட்டேன்.

இவ்விவகாரத்தில் விசாரணை நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்யும் விதமாக விசாரணை முகமைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன். நன்றி” என்று பதிவிட்டு விளக்கமளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.