எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்டது இந்திய ராணுவம்: மனோஜ் சின்ஹா
எதிரி படைகளுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கும் இந்திய ராணுவம்..

துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா

துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா
இந்திய ராணுவம் முழு திறன் கொண்டது என்றும், எதிரி படைகளுக்குத் தகுந்த பதிலடி கொடுத்து வருவதாகவும் ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கூறினார்
விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர்,
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் எந்த இடைநிறுத்தமும் இருக்காது. பாதுகாப்பு அமைப்புகளுக்கு அச்சுறுத்தலைத் தவிர்க்கவும், பிராந்தியத்தில் அமைதியை உறுதிசெய்யத் தெளிவான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.
எல்லைத் தாண்டிய துப்பாக்கிச்சூடு, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே சமீபத்தில் நடந்த பல குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு மத்தியில், இந்திய ராணுவம் முழு திறன் கொண்டுள்ளது என்றும் எல்லையில் தகுந்த பதிலடி கொடுத்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காவல்துறை மற்றும் பிற பாதுகாப்பு நிறுவனங்கள் முழு ஒத்துழைப்புடன் செயல்படுவதாகவும், பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டவும், இந்த சுற்றுச்சூழல் அமைப்பை முடிவுக்குக் கொண்டுவரவும் தெளிவான வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...