மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

பஞ்சாபில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து: 5 பேர் பலி!

ஃபரித்கோட் மாவட்டத்தில் தனியார் பேருந்து விபத்துக்குள்ளானது..

News image

பேருந்து கவிழ்ந்து விபத்து - impress

Updated On :18 பிப்ரவரி 2025, 12:14 pm IST

பஞ்சாபின் ஃபரித்கோட் மாவட்டத்தில் தனியார் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் பயணிகள் 5 பேர் பலியாகினர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஃபரித்கோட்-கோட்கபுரா சாலையில் காலை 8 மணியளவில் 36 பயணிகளுடன் பேருந்து முக்த்சாரில் இருந்து அமிர்தசரஸுக்குச் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நடைபெற்றது.

தனியார் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 10 அடி உயரப் பாலத்திலிருந்து கால்வாயில் கவிழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பேருந்து முதலில் ஒரு லாரியுடன் மோதி பின்னர் கால்வாயில் கவிழ்ந்ததாக, விபத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததாக ஃபரித்கோட் மூத்த காவல் கண்காணிப்பாளர் பிரக்யா ஜெயின் செய்தி நிறுவனம் ஒன்றுக்குத் தெரிவித்தார்.

மேலும், 26 பயணிகள் ஃபரித்கோட்டில் உள்ள குரு கோபிந்த் சிங் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு முதற்கட்ட சிகிச்சைகள் வழங்கப்படுகிறது.

காயமடைந்தவர்களில் இருவர் அமிர்தசரஸில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் விபத்தில் ஒரு கையை இழந்தார். மருத்துவமனையில் ஒரு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து போலீஸார் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.