டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சீனாவுடன் மீண்டும் வர்த்தகம்? டிரம்ப்பின் பேச்சால் இந்தியா ஏமாற்றம்!

சீனாவில் மீண்டும் வர்த்தகம் செய்யத் தயாராக இருப்பதாக டொனால்ட் டிரம்ப்பின் கருத்தால் வர்த்தக அரங்கில் பெரும் அதிர்வலை

News image
கோப்புப் படம்
Updated On :21 பிப்ரவரி 2025, 2:06 pm

DIN

சீனாவில் மீண்டும் வர்த்தகம் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கருத்து வர்த்தக அரங்கில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

சீன பொருள்கள் மீதான 10 சதவிகிதம்வரையிலான வரி உயர்வு, சீன செயலியான டிக் டாக் செயலிக்கு தடை, தைவான் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு, ஹுவாய் நிறுவனத்தின் பொருள்களுக்கு கட்டுப்பாடு முதலான அமெரிக்காவின் செயல்பாடுகளால் சீனா மிகவும் பாதிப்படைந்துள்ளது.

மேலும், சீனா மீதான வரியை 25 சதவிகிதத்துக்கு உயர்த்தவிருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். குறிப்பாக, உலகளவில் சீனா முதலிடத்தில் உள்ள மரக்கட்டை ஏற்றுமதியைக் குறிவைத்து, வரி உயர்வு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர்கள் வரலாற்றில் சீனாவை இந்தளவுக்கு சீண்டி பார்க்கும் ஒரே அதிபர் டிரம்ப்தான் என்று சிலர் கூறி வருகின்றனர்.

சீனாவுக்கு அதிகளவில் அமெரிக்கா தொல்லை கொடுத்து வந்தாலும், சீனா தொடர்ந்து அமைதி காத்து வருகிறது. அமெரிக்காவுக்கு தேவைப்படும் பொருள்களில் 18 சதவிகிதம், சீனாவிலிருந்துதான் ஏற்றுமதியாகிறது. சுமார் ரூ. 3.06 லட்சம் கோடி மதிப்பில் ஏற்றுமதியாகும் அமெரிக்காவுடனான வர்த்தக உறவை சீனா கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை என்றும் சிலர் கூறுகின்றனர்.

இந்த நிலையில்தான், சீனாவில் இருந்த அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவுக்கு மாறுவதற்கு திட்டமிருந்தன. அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவுக்கு மாறினால், இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகரித்து பொருளாதாரமும் உயரும்.

இதற்கிடையே, சீனாவுடன் மீண்டும் வர்த்தகம் செய்யத் தயார் என்று டிரம்ப் கூறியிருப்பது சர்வதேச வர்த்தக அரங்கில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மாறவிருந்த அமெரிக்க நிறுவனங்கள், தங்கள் திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.