சீனாவில் மீண்டும் வர்த்தகம் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கருத்து வர்த்தக அரங்கில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
சீன பொருள்கள் மீதான 10 சதவிகிதம்வரையிலான வரி உயர்வு, சீன செயலியான டிக் டாக் செயலிக்கு தடை, தைவான் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு, ஹுவாய் நிறுவனத்தின் பொருள்களுக்கு கட்டுப்பாடு முதலான அமெரிக்காவின் செயல்பாடுகளால் சீனா மிகவும் பாதிப்படைந்துள்ளது.
மேலும், சீனா மீதான வரியை 25 சதவிகிதத்துக்கு உயர்த்தவிருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். குறிப்பாக, உலகளவில் சீனா முதலிடத்தில் உள்ள மரக்கட்டை ஏற்றுமதியைக் குறிவைத்து, வரி உயர்வு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர்கள் வரலாற்றில் சீனாவை இந்தளவுக்கு சீண்டி பார்க்கும் ஒரே அதிபர் டிரம்ப்தான் என்று சிலர் கூறி வருகின்றனர்.
சீனாவுக்கு அதிகளவில் அமெரிக்கா தொல்லை கொடுத்து வந்தாலும், சீனா தொடர்ந்து அமைதி காத்து வருகிறது. அமெரிக்காவுக்கு தேவைப்படும் பொருள்களில் 18 சதவிகிதம், சீனாவிலிருந்துதான் ஏற்றுமதியாகிறது. சுமார் ரூ. 3.06 லட்சம் கோடி மதிப்பில் ஏற்றுமதியாகும் அமெரிக்காவுடனான வர்த்தக உறவை சீனா கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை என்றும் சிலர் கூறுகின்றனர்.
இந்த நிலையில்தான், சீனாவில் இருந்த அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவுக்கு மாறுவதற்கு திட்டமிருந்தன. அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவுக்கு மாறினால், இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகரித்து பொருளாதாரமும் உயரும்.
இதற்கிடையே, சீனாவுடன் மீண்டும் வர்த்தகம் செய்யத் தயார் என்று டிரம்ப் கூறியிருப்பது சர்வதேச வர்த்தக அரங்கில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மாறவிருந்த அமெரிக்க நிறுவனங்கள், தங்கள் திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாக்குதல் நடத்தவேண்டாம் என அமெரிக்காவிடம் கேட்கவில்லை: டிரம்ப் பேச்சுக்கு ஈரான் மறுப்பு!
ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்பு
உலகம் யார் பக்கம்?

லெபனானுக்கு அமெரிக்கா பெரும் உதவி!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



