பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கேரளம்: சுங்கத்துறை குடியிருப்பில் ஒரே வீட்டில் மூன்று சடலங்கள்!

கேரளத்தில் சுங்கத்துறை குடியிருப்பில் ஒரே வீட்டில் மூன்று சடலங்கள் கிடந்துள்ளன.

News image
கேரளத்தில் சம்பவம்
Updated On :22 பிப்ரவரி 2025, 12:29 pm

DIN

கேரள மாநிலம் எர்ணாகும் மாவட்டத்தில் மத்திய சுங்கத் துறை குடியிருப்பில், ஒரு வீட்டிலிருந்து மூன்று உடல்கள் கைப்பற்றப்பட்டு உடல் கூறாய்வு செய்யப்பட்டுள்ளது.

இறந்தவர்கள், ஜிஎஸ்டி கூடுதல் ஆணையராக இருந்த மணீஷ் விஜய், அவரது தாய் சகுந்தலா, சகோதரி ஷாலினி என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்களது பூர்வீகம் ஜார்க்கண்ட் மாநிலம்.

மூவரது உடல்களும் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், மணீஷ் மற்றும் ஷாலினி ஆகியோர் உடல்கள் தூக்கில் தொங்கிய நிலையிலும் அவர்களது தாய் உடல் படுக்கையிலும் கிடந்துள்ளது.

இயற்கைக்கு மாறான மரணம் என்று பதிவு செய்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பிப். 20ஆம் தேதி மூன்று பேரின் உடல்களைக் கண்டுபிடித்தோம். அவர்களது உறவினர்களுக்கு தகவல் கொடுத்திருக்கிறோம். உடல் கூறாய்வு முடிந்துவிட்டது. அந்த அறிக்கை வந்தபிறகுதான் மூவரும் எப்படி இறந்தார்கள் என்பது தெரிய வரும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.