மும்பையில் அடுத்த மூன்று நாள்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறுகையில்,
மும்பையில் தற்போது வெப்பநிலை இயல்பை விட ஆறு முதல் ஏழு டிகிரி வரை அதிகமான இருப்பதாகவும், பிப்ரவரி மாதத்தில் மட்டும் 38.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளதாகவும், இது 5 ஆண்டுகளில் இல்லாதவகையில் அதிகபட்சமாகப் பதிவாகியுள்ளது.
நகரம் முழுவதும் அதிகப்படியான வெப்பநிலையும், பிற்பகலுக்கு மேல் 36 டிகிரிக்கு மேல் நிலவும் வெய்யிலால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மும்பை, தாணே, பல்கர் மற்றும் நவி மும்பை ஆகிய பகுதிகளில் அடுத்த மூன்று நாள்களுக்கு வெய்யில் இயல்பை விட அதிகரிக்கும். மேலும் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
தனியார் வானிலை நிறுவனமான ஸ்கைமெட்டின் கூற்றுப்படி,
மும்பையில் இந்த மாதத்தின் பிற்பகுதியில் வெப்பம் அதிகமாகக் காணப்படும். கடல் காற்று தாமதமாகத் தொடங்குவது மும்பையின் வெப்பநிலை அதிகரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக, கடல் காற்று நண்பகலில் தொடங்கி, பகல்நேர வெப்பநிலையைச் சீராக்க உதவுகிறது.
இருப்பினும், கடல் காற்று ஒரு மணி நேர தாமதமாவதால், வெப்பநிலை 2-3 டிகிரி வரை அதிகரிக்கக்கூடும். கடந்த சில நாள்களாக, பிற்பகல் நேரங்களில், வடகிழக்கு திசையிலிருந்து வீசும் வெப்பக் காற்று, தாங்க முடியாத அளவுக்கு வெப்பத்தை ஏற்படுத்துகிறது.
செவ்வாய்க்கிழமையான இன்று மும்பையில் வெப்பநிலை 36 டிகிரி, அதற்கு மேல் பதிவாகும். அதிக ஈரப்பதம் அசௌகரியத்தை அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். பிப்ரவரி மாத இறுதி நாள்களில் மும்பை மக்கள் அதிகப்படியான வெப்பத்தை அனுபவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மனிதகுலத்துக்கு மற்றொரு சவால்

பிரான்ஸில் கடும் வெப்ப அலை: ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பு!

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை!

தமிழ்நாட்டில் அடுத்த மாதமும் வெப்ப அலை வீசும்: வானிலை எச்சரிக்கை!
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



