கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சமூகத் தீமைகளை ஒழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் துறவிகள்: குடியரசுத் தலைவர்

துறவிகள் சமூகத் தீமைகளை ஒழிப்பதில் முக்கிய பங்கு..

News image
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
Updated On :26 பிப்ரவரி 2025, 10:10 am

DIN

இந்தியாவில் உள்ள துறவிகள் சமூக தீமைகளை ஒழிப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளதாகவும், சமூகத்தில் பெண்களுக்கு மரியாதைக்குரிய இடத்தை உறுதி செய்துள்ளதாகவும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தின் கர்ஹா கிராமத்தில் உள்ள பாகேஷ்வர் கோயிலில் நடைபெற்ற திருமண விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டார். கோயிலில் 251 ஜோடிகளுக்குத் திருமணம் நடைபெற்றது.

விழாவில் அவர் பேசியது,

2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடையத் துறவி சமூகத்தின் பங்கு முக்கியமானது. சமூகத் தீமைகளுக்கு எதிராகக் குரல் எழுப்புவதன் மூலம் சமூகத்திலிருந்து தீமைகளை அகற்றுவதிலும் துறவிகள் முக்கிய பங்கு வகித்துள்ளனர். மேலும் சமூகத்தில் பெண்களுக்கு மரியாதைக்குரிய இடத்தையும் உறுதி செய்துள்ளது.

துக்காராம், ரவிதாஸ், கபீர்தாஸ், குருநானக், மீரா பாய் போன்ற பிரபல துறவிகளின் பங்களிப்பைப் பற்றி அவர் நினைவு கூர்ந்தார்.

கூட்டுத் திருமண விழாவை ஏற்பாடு செய்ததற்காக பாகோஷ்வர் கோயில் அமைப்பைப் பாராட்டினார் முர்மு. திருமணப் பெண்கள் சுயச்சார்புடையவர்களாக மாற்றத் தையல் இயந்திரம் பிற தேவையான பொருள்கள் அவர்களுக்குப் பரிசாக வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.

இந்த விழாவில் மத்தியப் பிரதேச ஆளுநர் மங்குபாய் படேல், முதல்வர் மோகன் யாதவ் மற்றும் பாகேஷ்வர் பீடத்தின் மடாதிபதி திரேந்திர சாஸ்திரி ஆகியோரும் கலந்துகொண்டு உரையாற்றினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.